1 .ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க ... ஆனா பஸ்ல காசுக் கொடுக்கலன்னா... பஸ் ஓட்டச்சொல்வாங்களா?
2. விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா ... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
3. அப்பா அடிச்சா வலிக்கும், அம்மா அடிச்சா வலிக்கும், ஆனா .. சைட் அடிச்சா வலிக்காது
4 .அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?
5 .மண்டையில போடுறது DYE... மண்டைய போட்டா DIE...!!
6. தண்ணியில கப்பல் போனா ஜாலி .... கப்பலுக்குள்ள தண்ணி போனா நீ காலி!!!
7. இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்...
அப்படியா?..
ஆமாம்! இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...
8. ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?...
என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான், அதான்.
9.காதலி மாசமாய் இருப்பது தெரிய வரும்போது வருவது பதற்றம்.
காதலி மாசமாய் இருப்பது மனைவிக்கு தெரிய வரும்போது வருவது நடுக்கம்.
10. ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?....
வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் திருப்பி நான் பண்ணுறேன்!
11 .வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?
மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.
12 . நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...
பெண் அவ்வளவு அழகா? இல்லடா...
விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..
No comments:
Post a Comment