கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, December 30, 2016

மகான் கொடுத்த பிச்சை ஓடும் அதன் மகத்துவமும்

பிச்சை ஓடுஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.

ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான். முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.

சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார். கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான். எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான் பிச்சைக்காரன்.

இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு காலமா வச்சிருக்க? எனக்கேட்க..

எங்க அப்பா, தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா.... ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே! யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..

அடப்பாவி! பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா? எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க, பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்... அந்தப் பிச்சை ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார். பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.

சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல... அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..! என பரிதாபமாக கேட்க...

கடைக்காரர் சிரிக்கிறார். மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை. பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு ஐயா... தர்மப்பிரபு! கடைக்காரர் ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட... அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து... மெள்ள மெள்ள... மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!

பிச்சைக்காரனின் கையில் அந்தத் தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர் வேதனையுடன் சொன்னார்! அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு, இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.? என சொல்கிறார்.

இதே போலத்தான்... நாமும் நமக்குள் இருக்கும்... ஆழ்மனத்தின்... தன்னம்பிக்கை- யின் மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை...., உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்... உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..!

(படித்ததில் பிடித்தது)

புரிந்தவர்கள் விளக்கவும்

ஒரு பலசரக்கு வியாபாரி,ஒரு ஆசிரியர்,ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்ற போது வழிதவறிப் போயிற்று.

மிகுந்த அலைச்சலுக்குப் பின் ஒரு விவசாயியின் வீட்டைக் கண்டு பிடித்தனர். விவசாயியிடம் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேட்க,விவசாயி சொன்னார், ''உங்களில் இருவர் தங்க அறை கொடுக்க முடியும்.மூன்றாவது நபர் ஆடு,பசு,பன்றி இவை தாங்கும் கொட்டகையில் தான் தூங்க வேண்டும்.

ஆசிரியர் ,''நான் போய் அங்கு படுத்துக் கொள்கிறேன்.''என்றார்.

மற்ற இருவரும் அறையில் போய் படுத்துக் கொண்டனர். கொஞ்ச நேரம் ஆனவுடன் கதவு தட்டப்பட்டது.கதவைத் திறந்த போது அங்கு ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.

''என்னால் அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.''

உடனே பலசரக்கு வியாபாரி,''சரி,சரி,நான் அங்கு போய் தூங்குகிறேன்,''என்று கூறி கொட்டகைக்குச் சென்றார்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வியாபாரி வாந்தி எடுத்துக் கொண்டே நிற்கிறார் .

இறுதியாக அரசியல்வாதி ,தான் அங்கு போவதாகக் கூறிச் சென்றார்.

ஐந்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது. ஆசிரியரும்,வியாபாரியும் கதவைத் திறந்து பார்த்தனர்.

இப்போது ஆடு,பசு,பன்றி இவையெல்லாம் நின்று கொண்டிருந்தன. கொஞ்சம் பழசுதான், ஆனா எந்த காலத்துக்கும் பொருந்தும்
கதை.

கதை புரிந்தவர்கள் விளக்கவும்.ஆடு மாடு ஏன் வெளியே வந்தன என.

Thursday, December 29, 2016

பசியிலும் மனிதாபிமானம்

ஒரு முதியவர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். வெயிலில் வந்த களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது.

அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை அழைத்து கேட்டார் " தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை"

அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான்.

பெரியவர் தனது சட்டை பைக்குள் கை விட்டு பார்த்து சர்வரிடம் கேட்டார் "தம்பி அதற்கும் சற்று குறைவாக சாப்பாடு கிடைக்காதா.."?

சர்வர் கோபமாக "யோவ் ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க. இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ இருக்கு அங்க போய் தொலைங்கயா" என்றான்.

பெரியவர் சொன்னார் "தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன் வெளியே வெயில் வேறு அதிகமா இருக்கு. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்.

" சர்வர் "சரி..சரி எவ்வோ பணம் குறைவா வச்சுயிருக்க?" என்று கேட்டான்.

பெரியவர் "என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது." என்றார்.

சர்வர் "சரி.தருகிறேன். ஆனால் உனக்கு தயிர் இல்லை சரியா?" என்றான்.

பெரியவர் 'சரி' என சம்மதித்தார்.

சர்வர் சாப்பாடு கொடுத்தான். பெரியவர் சாப்பிட்டு விட்டு அந்த சர்வரிடம் 50 ரூபாய் கொடுத்தார்.

சர்வர் மேலும் கோபம் ஆனான். "யோவ்  50 ரூபாய் வச்சுயிருக்க. 45 ரூபாய் தான் இருக்கு'னு ஏன் பொய் சொன்ன..? ஓ.. வெற்றிலை.. பாக்கு வாங்குறதுக்கு 5 ரூபாய் தேவைப்படுதா..? இந்தா..மீதி 5 ரூபாய்." என்று மீதியை கொடுத்தான்.

பெரியவர் சொன்னார் "வேண்டாம் தம்பி அது உனக்குத் தான். உனக்கு கொடுக்க என்னிடம் வேறு பணம் இல்லை." சொல்லிவிட்டு வெயிலில் நடந்து சென்றார்.

சர்வருக்கு கண்களில் நீர் ததும்பியது.

அன்பு நண்பர்களே... யார் எந்த சூழ்நிலையில் எப்படி இருப்பார்கள் என்று நமக்கு தெரியாது. யாரையும் ஏளனமாக பார்ப்பதும் பேசுவதும் தவறு..!!

பழைய 500 ,1000 நோட்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

#பழைய 500 1000 ரூபாய் நோட்டுகள்.....!!! நாளை மறுநாள் முதல் வங்கிகளில் தவிர இனி வேறு எங்கும் செல்லாது...!!!

*மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால் அபராதம் மற்றும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது...!!!

*புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், புதிதாக ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் கடந்த மாதம் 8–ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

#கால அவகாசம் நாளை முடிகிறது.... அதன்படி, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு உள்ளன. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகணக்கில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்வதற்கு மத்திய அரசு அவகாசம் வழங்கியது. இந்த அவகாசம் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

*நாட்டில் ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் இதுவரை ரூ.14 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

#மார்ச் 31–ந் தேதி வரை...!!! *கால அவகாசம் முடிந்த பிறகும் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால் அவற்றை, ஜனவரி 1–ந் தேதி முதல் மார்ச் 31–ந் தேதி வரை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

*குறிப்பாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், தொலைதூர பகுதிகளில் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை இவ்வாறு கொடுத்து மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

*அப்போது அந்த ரூபாய் நோட்டுகளை தாமதமாக மாற்றுவதற்கான காரணத்தையும் அவர்கள் எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

*அவசர சட்டம்...!!

*மார்ச் 31–ந் தேதிக்கு பிறகு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுளை வைத்து இருப்பது குற்றமாக கருதப்படும்.

*இதுதொடர்பாக மத்திய அரசு, ‘குறிப்பிட்ட வங்கி ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு அவசர சட்டம்’ என்ற புதிய அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்து உள்ளது....

*பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

*இந்த அவசர சட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–

அபராதம்...

* ஜனவரி 1–ந் தேதி முதல் மார்ச் 31–ந் தேதி வரை ரிசர்வ் வங்கி கிளையில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றும் போது தவறான தகவல்கள் தெரிவித்தால், அவர்களுக்கு ரூ.5,000 அல்லது அவர்கள் டெபாசிட் செய்யும் பணத்தைப் போன்று 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்.

* செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில், அதிகபட்சமாக 10 நோட்டுகள் வரை ஒருவர் வைத்துக் கொள்ளலாம். #அபராதம், சிறை தண்டனை....!!!

* மார்ச் 31–ந் தேதிக்கு பிறகு அதற்கு அதிகமாக யாராவது பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால், அது கிரிமினல் குற்றமாக கருதப்படும்.

* அப்படி யாராவது வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அல்லது வைத்து இருக்கும் தொகையைப் போல் 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்.

* சில சந்தர்ப்பங்களில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

#அமலுக்கு வரும்....

*இந்த அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவரது ஒப்புதல் கிடைத்ததும் அவரச சட்டம் அமலுக்கு வரும்....!!!

*பின்னர், இந்த அவசர சட்டம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு 6 மாதங்களுக்குள் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேற்றி, அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றதும், அவசர சட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும்.

*முன்பு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது, 1978–ம் ஆண்டு அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது......!!!

*அப்போதும் அது தொடர்பான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் இப்போதும் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட இருக்கிறது. #கருப்பு பணம்...

*கருப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும், பயங்கரவாதிகளுக்கு பண உதவி கிடைப்பதை தடுக்கும் நோக்கத்திலும்தான் உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.

*அந்த வகையில், கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் தாமாக முன்வந்து அதுபற்றிய கணக்கு விவரத்தை தெரிவித்து, அந்த தொகைக்கு 50 சதவீத வரியும், அபராதமும் செலுத்தி தண்டனையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பை மத்திய அரசு ஏற்கனவே வழங்கி உள்ளது.....!!!

*அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டால், அந்த நபர்கள் வைத்திருக்கும் தொகைக்கு 90 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறந்த பொன்மொழிகள்

*சிறந்த 25 பொன்மொழிகள்* ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

1). அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2). கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3). ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4). ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5). சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6). ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7). உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8). சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9). எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10). அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11). முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12). ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13). எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14). எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15). எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16). ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17). செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18). சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.

19). நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20). மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21). பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22). வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23). நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

24). அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25). தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

*படித்தவுடன் மற்றவர்களுக்கு கண்டிப்பாக பகிருங்கள், தெரிந்துகொள்ள வேண்டிய பொன்மொழிகள்...*

Saturday, December 24, 2016

கண்ணீரை வர வைத்த கவிதை

ஒரு விவசாயியின் கண்ணீர்•

நெத்தில கைவச்சு நெடுக பாத்தா படுத்து கிடக்குறதெல்லாம் என்னோட பயிர் தான்...

தண்ணி இல்லாம தலை சாஞ்சு போச்சு அதை பாத்த எனக்கு உசுரு கொல சாஞ்சு போச்சு....

வாங்குன கடனுக்கு தூங்குற இடமும் போச்சு கூலி குடுத்த காசுக்கு தாலி கூட போச்சு...

கவுர்மென்ட் ஆபிசரெல்லாம் கார் எடுத்து வராங்க கடன கட்டுனு கண்டபடி ஏசுராங்க...

பலகோடி அடிச்சவன் பந்தாவா திரியிறான் நடவுக்கு கடன் வாங்குன நானோ நடுத்தெருவுல நிக்கிறேன்...

ஊரை ஏய்க்கிறவனெல்லாம் உச்சத்தில வாழுறான் சோறு போட பிறந்த நானோ சேத்துக்குள்ள கிடக்குறேன்...

அடியாளா இருப்பவனெல்லாம் ஆடி கார்ல் போறான் விவசாயம் பன்னுற நானோ வீதியில நிக்கிறேன்....

என்னய்யா பாவம் செஞ்சேன்? மூத்த மக இப்ப தான் முழுகாம வந்திருக்கா, ஆஸ்பத்திரிக்கி போக கூட அப்பன் எனக்கு வக்கு இல்ல....

இளைய மக இப்பதான் எட்டாவது படிக்கிறா, பரிச்சைக்கு அனுப்பக் கூட பத்து ரூவா காசில்ல....

பாத்து வளத்த பசுமாடு கூட, வயித்துல பசியோட வலியில்லாம நிக்குது....

குறுவை நடவுக்கு ஒரு கொள்ளையை வித்துட்டேன்....

உரம் வாங்கிப் போட இருந்த ஒத்தை மாட்டையும் வித்துட்டேன்....

இனிமே ஒன்னுமில்ல என்கிட்ட அடகு வைக்க, இடிஞ்சு போச்சுய்யா என்வீட்டு செவருகூட...

அய்யா அரசாங்க சாமிகளே! ஆண்டுக்கு ஒருமுறையாவது அணைக்கட்ட திறந்திடுங்க...

ஏய்,பட்டனத்து மனுசங்களே, உங்க வயித்துக்கு சோறு தந்த எங்க வயித்தெறிச்சல கேளுங்க...

அடுத்த தலைமுறைக்கு அஞ்சாறு பிளாட் வாங்குனீங்களே, சோறு திங்க நிலம் வேணும்னு கொஞ்சூண்டு நினைச்சிங்களா?

பத்திரிகை காரங்களே சென்னையில் வெள்ளம்னு முன்னால எழுதுனிங்களே...

விவசாயி வேதனை மட்டும் விளையாட்டா போச்சா? கரைவேட்டி காரங்களே தேர்தல் நேரத்தில தேடிவந்து நின்னிங்களே ஓயாம அழுகுற எங்க ஒப்பாரி கேட்கலயா?

மரங்கள வெட்டாதிங்க! மண்ணை அள்ளாதிங்க! மழை வந்து எட்டி பாக்கும் அதை மல்லுக்கட்டி விரட்டாதிங்க! நீங்க திங்கிற அரிசியெல்லாம் தண்ணீருல விளையல, அது எங்க கண்ணீருல விளையுது!

நீங்க பட்டன தட்டுனா ஏசி ஓடும், உங்க பசி ஓடுமா? உதட்டுச் சாயத்தை விலை கொடுத்து வாங்குவிங்க, விவசாயத்தை வாங்க முடியுமா? சோறு போடுற எங்களை கூறு போட பாக்காதிங்க, வாழ வச்ச எங்களை அழ வச்சு பாக்காதிங்க! ஏறு புடிச்ச நாங்க வேறு எங்க போவோம்..?

உழைச்சு பொழச்ச நாங்க களச்சு போக மாட்டோம்! ஆண்டவன் அனுப்பி வச்ச அடுத்த கடவுள் நாங்க, வயிறு பசி போக்க வந்த வள்ளலார் நாங்க! எங்க கண்ணீரையெல்லாம் கண்டுக்காம விட்ராதிங்க, எங்க அழுகையெல்லாம அலட்சியம் செய்யாதிங்க....

காலம் ஒருநாள் எங்களை கடவுளாக் காட்டும்...! சரித்திரம் ஒருநாள் எங்களை சாதனையா பேசும்...! 

படித்ததில் பிடித்தது

இப்படிக்கு ஓர் விவசாயி.

தயவு செய்து இனியாவது இதை செய்யுங்கள்

இந்த பதிவை படிப்பவர்கள்ஸ முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விறகிற்கு பயன்படும் என்று வெளிநாட்டிலிருந்து சீமை கருவேலம் (Prosopis Juliflora) விதைகள் கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன.

இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்…! கடந்த 62 ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளை படர்ந்து ஏறத்தாழ 25 சதவித விளை நிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இதை வேருடன் களையாவிட்டால் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். சீமைக் கருவேல மரங்கள்… இந்த மரத்தினை பார்க்காத ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருக்க முடியாது. தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் வளர்ந்துக் கொண்டு இருக்கிற ஒரு மரம்.

எந்த ஒரு வறண்ட நிலத்திலும் எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்து கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல் வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் இது .

தமிழகத்தின் இன்றைய வறட்சியான நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியும். இந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலைப்படாது. ஏனெனில் ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி மண்ணின் நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது.

இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது. இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது.

காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம் மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும், எண்ணெய்ப் பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது.

தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது யாருக்கும் இது வரை புரியவில்லை. ஆனால், இதை அறியாமல் தமிழ் மக்கள் இன்னும் புதிதாக இம்மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள்.

தங்கள் வீடுகளுக்கும், வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைக்கிறார்கள். வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர். இது பேராபத்தை இந்த மண்ணுக்கு செய்கிறது என்பதை அவர்கள் அறியாது இருக்கிறார்கள்.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அது தான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகி விடும், அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன் தான் பிறக்கும். ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி விடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது.

இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த சீமைக் கருவேல மரங்கள், பிராணவாயுவை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டமிடலுடன் செயல் பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள். வெட்டி போட்டு கொளுத்தி விட்டு சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள். அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது.

அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது. இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டு விட்டால் சாத்தானை கண்டு விட்டது போல் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள். கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் தெரியுமா?

நம் தமிழ் நாட்டிலிருந்து தான் விறகு செல்கிறது. அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள், ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும். கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள் ஆனால் அவர்களின் தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்கிறது…!

சீமை கருவையை அழித்துவிட்டால் நம் நாடும் கேரளா போல் குளுமை பெறும். இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம். நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள் இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்.... வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்.. நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்றவற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம். இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்!!