கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, April 30, 2016

உழைப்பாளியும் உயர் வர்க்கமும்

வெந்நீரில் குளிப்பவன் உயர்ந்த வர்க்கம்
வியர்வையில் குளிப்பவன் உழைப்பாளி வர்க்கம்

கத்தை பணத்தில் படுப்பவன் படுப்பவன் உயர் வர்க்கம்
கட்டாந்தரையில் படுப்பவன் உழைப்பாளி வர்க்கம்

கரன்சியோடு வாழ்பவன் உயர் வர்க்கம்
கஷ்டத்தோடு வாழ்பவன் உழைப்பாளி வர்க்கம்

ஏசி காற்றுடன் வாழ்வது உயர் வர்க்கம்
தூசி காற்றுடன் வாழ்வது உழைப்பாளி வர்க்கம்

Thursday, April 28, 2016

DOCOSS X1 mobile at Rs 888

Jaipur: Not long ago, Noida-based Ringing Bells created a global buzz by offering a smartphone for just Rs 251. Three months later, similar advertisements have appeared in newspapers here in which a local company has offered a smartphone for less than Rs 1,000. Docoss Multimedia Private Limited, a company with its office in a small building in Maharani Farm, a not-so-upscale area, is offering a smartphone under the name Docoss X1 for Rs 888. The modus operandi is the same. To book the phone, you have to log on to the company's website. One can also book via phone by sending an SMS to a number provided in the advertisement. Bookings close on Friday and delivery will start from May 2. The company has also offered cash on delivery to win people's trust. According to the advertisement in Wednesday's front page of newspapers, the phone will have the latest features - 1.3 GHz dual-core cortex A7 processor. Dual SIM, both 2G and 3G-enabled, 1 GB RAM, 4 GB internal memory which is expandable to 32 GB, 4-inch IPS screen, 1300 mAH lithium battery, 2.0 MP back camera and 0.3 MP front camera that runs on Android 4.4 Kitkat with a one-year warranty. Though the price is 3.5 times of the offer by Ringing Bells for its Freedom 251, but it is still well below the manufacturing cost of such smartphones. Ringing Bells too had splashed newspapers with full-page advertisements with its offer. According to the company, "Freedom 251" was to run on Android 5.1 operating system and sport a 4-inch qHD IPS display, a 3.2-megapixel primary and a 0.3-megapixel front camera. The offer was too good to believe but people rushed to book the phone, crashing the website. Initially, the company had asked for a deposit but when doubts were raised about its intentions and the viability of the handset following an assessment that such a device cannot be offered for less than Rs 2,300-2,400, it said that people can just book the phone and choose the option of cash on delivery. BJP leader Kirit Somaiya even filed an FIR against the company's owners. Soon, the company stopped taking orders while the payment gateway facilitator PayUBiz withheld the money due to a surge in queries over the phone.

Wednesday, April 27, 2016

மே தினம் தோற்றம்

ஒருவர் எதற்காக உழைக்கிறார்? மகிழ்ச்சியாக வாழ்வதற்காக!

ஆனால், நாள் முழுக்க உழைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி எப்படி கிடைக்கும்?

அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர் களுக்கும், பெரும்பாலான தொழில் நிறுவனங்களிலும் 8 மணி நேரம்தான் வேலை நிர்ணயிக்கப்பட் டிருக்கிறது.

அதற்கேற்ப ஊதிய மும் தரப்படுகிறது. இந்த 8 மணி நேர வேலை என்பதும், அதற்கேற்ற ஊதியம் என்பதும் எங்கே, எப்போது, எதற்காக, எப்படி நிர்ணயிக்கப்பட்டது?

கட்டாய வேலை

18-ம் நூற்றாண்டின் இறுதியி லும் 19-ம் நூற்றாண்டின் தொடக் கத்திலும் மேற்கத்திய நாடுகளில் தினமும் 12 முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில் 20 மணி நேரமும் தொழிலாளர்கள் வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இயக்கமும் போராட்டமும்

இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கமும், அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்களும், பென்சில் வேனியா நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், ரயில்வே தொழிலாளர்களும் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து போராடினர்.

1832-ம் ஆண்டு பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமெரிக் காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங் களும், சிறு வணிகர்கள் கூட்டமைப் பும் இணைந்து 1884-ம் ஆண்டு “ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்டு டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியனை” உருவாக்கினர். இந்தக் கூட்டமைப்பு 8 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து ஒரு தீர்மானத்தை நிறை வேற்றியது. இது தொழிலாளர் ஒற்றுமைக்கு பெரிய அளவில் வழிவகுத்தது.

இந்தக் கூட்ட மைப்பு,1886 மே 1-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்குக் காரணம்.

Tuesday, April 26, 2016

கோடை வெயிலை சமாளிக்க

கோடைக் காலத்தில் சாப்பிட வேண்டியவை, சாப்பிடக் கூடாதவை: 

தண்ணீர்

கோடைக் காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து காத்துக் கொள்வதற்கு, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தாகமே இல்லையென்றாலும், நிறையத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

பழங்கள்

பப்பாளி, மாம்பழம், கிர்ணிப் பழம், தர்பூசணி, போன்றவற்றை உட்கொள்ளலாம். பெரி வகையை சார்ந்த பழங்களில்: ஸ்ட்ராபெரி, ப்ளூபெரி, ப்ளாக்பெரி, கூஸ்பெரி, ராஸ்பெரி ஆப்பிள், செர்ரி போன்றவை உட்கொள்ளலாம். 

காய்கறிகள்

பாகற்காய், கோஸ், காலிபிளவர், வெள்ளரிக்காய், பீன்ஸ், புதினா போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். உணவில் சாலட் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

தவிர்க்க வேண்டியவை

குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்த்துவிட்டு லெமன் ஜூஸ், இளநீர், நீர்த்த மோர்,ப்ரெஷ் ஜூஸ் குடிக்கத் தொடங்குங்கள்.

மிகவும் குளிர்ச்சியாக பானம் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியாக பானம் அருந்துவது அந்த நேரத்துக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். 

வடை, அப்பளம், சமோசா, சிப்ஸ், பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும்.

சூடான, மசாலா உணவுப் பதார்த்தங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

Monday, April 25, 2016

+2 ரிசல்ட் ரெடி.மே 5 வெளியிட திட்டம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, மே, 5ம் தேதிக்குள் வெளியிட அரசு தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இரு தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் முடிந்தது.
விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 23ல் முடிந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பிளஸ் 2 மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டு, சென்னையிலுள்ள அரசு தேர்வுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது.

இன்னும், இரு தினங்களில் மதிப்பெண் தொகுப்பு பணி முடிந்து, மாவட்ட வாரியாக முதலிடம்; மாநில வாரியான, 'ரேங்க்' எடுத்த மாணவ, மாணவியரின் பட்டியல் தயாரிக்கப்படும். 'சென்டம்' எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் கணக்கிடப்படும்.

இந்த பணிகள், ஏப்., 29ம் தேதிக்குள் முடிந்து விட்டால், மே, 2ம் தேதியே தேர்வு முடிவு வெளியிடப்படும்.
இதில் தாமதமானால், மே, 5ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, அரசு தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Friday, April 22, 2016

தமிழ்த்தாய் வாழ்த்து விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

”நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்

தெக்கனமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்க சிறு பிரைநுதலும் தரித்த நறும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
தமிழணங்கே !

உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து
வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம்

தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம்

அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,

செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்.

தேசிய கீதமும் பொருளும்

ஜன கண மன அதிநாயக ஜய ஹே -
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீதான். வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா -இந்தியத் திருநாட்டுக்குப் பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்த குஜராத மராட்டா த்ராவிட உத்கல பங்கா
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப் பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம், திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது.

விந்திய ஹிமாசல யமுனா கங்கா -
கடக்க முடியாத இயற்கை எல்லையான விந்திய மலை உன்னுடையது. உலகின் மிகப் பெரிய சிகரத்தைக்கொண்ட இமயமலை உன்னுடையது. வற்றாத இரு நதிகளான கங்கையும் யமுனையும் உன்னுடையவை. இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக்கொண்டு இருக்கின்றன.

உத்சல ஜலதி தரங்கா -மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்து இருக்கும் மாக்கடல்கள் உன் புகழைத் தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக்கொண்டு இருக்கின்றன.

தவ சுப நாமே ஜாஹே -
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக்கொண்டு இருக்கிறோம்.

தவ சுப ஆஷிஷ மாஹே
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டு இருக்கிறோம்.

ஜன கண மங்கல தாயக ஜய ஹே -
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே!
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.

சூரியக் குடும்பம்

* கோடிகணக்கான விண்மீன்கள் தொகுதியே அண்டம் எனப்படும்.

* பல கோடிகணக்கான அண்டங்களை கொண்ட தொகுதியே பேரண்டம் ஆகும்.

* பேரண்டத்தில் காணப்படும் பல்வேறு அண்டகளில் ஒன்று பால்வழி அண்டம்.

*பூமிக்கும் வானில் உள்ள சூரியன் நட்சத்திரங்களுக்கும் உள்ள தூரத்தை அளக்க ஒளியாண்டு என்ற அலகு பயன்படுத்தபடுகிறது.

*சூரியனின் ஓளி பூமியை வந்தடைய 8.4 நிமிடங்கள் ஆகின்றன.

* சூரிய குடும்பத்திற்கு அருகில் உள்ள நட்சத்திரம் பிரக்ஸிம செண்டரி. இது 4.3 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.

*சூரிய குடும்பம் பால்வழி அண்டம் ஆகும்.

*  இரவு வானில் ஒளிபுள்ளிகளை போலப் புலப்படும் விண்மீன்கள் எல்லாம் தொலைவில் உள்ள சூரியன்கள் ஆகும்.

* இவற்றுள் பல சூரியனை போல நூறு அல்லது 1000 மடங்கு பெரிய விண்மீன்கள். இவை மிக மிக தொலைவில் உள்ளதால் வெறும் புள்ளிகளை போல தெரிகின்றன.
சூரியன் மற்றும் நம் கண்களுக்கு புலப்படும் அனைத்து விண்மண்டலமே ஆகும்

நாடும் சிறப்பும்

* கிரீஸ் நாட்டு தேசிய கீதம் 158 வரிகளை கொண்டது.

* உலகிலேயே மிகப்பெரிய தொங்கு பாலம் உள்ள இடம் ஜப்பான்.

* எதிர்க்கட்சியே இல்லாத நாடாளுமன்றம் உள்ள நாடு சிங்கப்பூர்.

* 13 தீவுகளைக் கொண்டது இந்தோனேஷியா.

* உலகில் தாயின் பெயரிலுள்ள முதல் எழுத்தை இனிஷியிலாகப் பயன்படுத்துபவர்கள் ஸ்பெயின் நாட்டினர்.

* பரப்பளவில் உலகில் பெரிய நாடு ரஷ்யா.

* மிக உயரத்திலுள்ள நாடு திபெத்.

* சிங்கப்பூரில் தமிழ், ஆங்கிலம், சீனம், மற்றும் மலாய் ஆகிய 4 ஆட்சி மொழியாகும்.

* உலகில் பெரிய கோட்டை அரண்மனை இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘விண்ட்சர்’ அரண்மனைதான்.

* இந்தியாவிற்கு அருகில் சிறிய ஆசிய நாடு மாலத்தீவு. இதில் மொத்தம் 1100 தீவுகள் உள்ளன. அனால் 190 தீவில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.

* உலகில் அதிகம் கிராமங்கள் உள்ள நாடு இந்தியா. ஏறத்தாழ 10 லட்சம் கிராமங்கள் உள்ளன. இந்தியாவில் உத்திரபிரதேசத்தில்தான் அதிக கிராமங்கள் உள்ளன.

* உலகிலேயே மிகப்பெரிய விமானக் கட்டுமானக்கூடம் பிரான்ஸ் நாட்டிலுள்ள 'டூன்ஸ்' என்ற நகரில் உள்ளது.

* வெற்றிலையை முதன்முதலில் பயிரிட்ட நாடு மலேசியா.

* 'உலகின் சர்க்கரைக் கிண்ணம்' என்று அழைக்கப்படும் நாடு கியூபா.

* தக்காளியின் தாயகம் அமெரிக்கா.

* முதன்முதலில் வரி கட்டும் முறையைக் கொண்டு வந்த நாடு எகிப்து.

* மங்கோலியர்கள் தங்கள் நாட்டை தெய்வத்தின் நாடு என்று கூறுகிறார்கள்.

* நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு நார்வே. இது ஐரோப்பிய நாடு.

* முதன் முதல் டெலிபோன் டைரக்டரி வெளியிட்ட நாடு இங்கிலாந்துதான். ஆண்டு 1880.

* ஒரு நாட்டுக்கு ஒரு பிரதமர்தானே? இரண்டு பிரதமர் உள்ள நாடு சான்மரினோ.

* உலகிலேயே மிகப் பழமையான ரயில் நிலையம் இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரிலுள்ள 'லிவர்பூல் ரயில் நிலைய'மாகும்.

* விமானப் போக்குவரத்து முதன்முதலாகத் தொடங்கிய நாடு இங்கிலாந்து ஆகும்.

* 'கிராம்புகளின் தீவு' என்று அழைக்கப்படும் நாடு மடகாஸ்கர் ஆகும்.

* அஞ்சல் அட்டையை முதன்முதலில் வெளியிட்ட நாடு ஆஸ்திரியா ஆகும்.

* திராட்சைத் தோட்டம் அதிகம் உள்ள நாடு 'மால்டோவா' என்ற குடியரசு நாடாகும்.

* தென் அமெரிக்காவுக்கு ‘பறவைகளின் கண்டம்’ என்ற பெயரும் உண்டு.

* கோலாலம்பூர் என்றால் ‘மண்மேடு’ என்று பொருள்.

* தமிழ் இலக்கியத்தில் பர்மாவின் பெயர் ‘கடாரம்’.

* உலகில் ஊழலில் முதலிடம் வகிக்கும் நாடு நைஜீரியா.

* மகாத்மா காந்தி உருவம் பொறித்த தபால் தலையை முதலில் அமெரிக்காதான் வெளியிட்டது.

* ‘புன்னகை நாடு’ என்று அழைக்கப்படுவது தாய்லாந்து.

* பூடான் நாட்டில் சினிமா தியேட்டர்கள் கிடையாது.

* உலகிலேயே மிகவும் நீளமான சாலைப் போக்குவரத்து அமெரிக்காவிலுள்ள பான் அமெரிக்கன் நெடுஞ்சாலையாகும். இது மெக்சிகோவில் தொடங்கி சிசிலி வரை செல்கிறது.

* உலகில் மிகவும் நீளமான ரயில் பாதை ரஷ்யாவில் உள்ளது. இதன் நீளம் 5,800 மைல். இது மாஸ்கோவிலிருந்து விளாடிவோஸ்டோக் வரை செல்கிறது.

* உலகில் அதிகக் காடுகள் உள்ள நாடு பிரேசில்.

* 90 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஒரே நாடு 'மியான்மர்'.

* முதன்முதலாக சீனாவில்தான் பட்டாசு தயாரிப்பு தொடங்கியது.

* தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்து தபால் தலை வெளியிட்ட ஒரே நாடு சிங்கப்பூர்.

* உலகின் மிகப்பெரிய நூல் நிலையம் மாஸ்கோவில் உள்ள லெனின் தேசிய நூல்நிலையமாகும்.

* ‘ரொட்டி நாடு’ என்று அழைக்கப்படுவது ஸ்காட்லாந்து.

* உலகின் மிக நீண்ட ரயில் பாதை ‘டிரான்ஸ் –சைபிரியன் ரயில் பாதை’.

* ‘பனிக்கண்டம்’ என்று அழைக்கப்படுவது அண்டார்டிகா.

* உலகிலேயே மிகப்பெரிய நூலகம் லெனின் நூலகம். இது ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் உள்ளது.

* உலகில் முதன்முதல் தேர்தலில் பெண்களுக்கும் வாக்குரிமை தந்த நாடு நியூசிலாந்துதான். ஆண்டு 1918.

* நிலப்பரப்பில் உலகில் இரண்டாவது பெரிய நாடு கனடா ஆகும்.

* உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலை சீனாவில் உள்ளது.

* உலக வாணிய நிறுவனத்தின் தலைமையகம் உள்ள இடம் ஜெனிவா.

* ஒரு நாட்டுக்கு ஒரு தேசியக்கொடிதானே? உலகில் இரண்டு தேசியக்கொடி கொண்ட நாடு எது தெரியுமா? ஆப்கானிஸ்தான்.

* நாம் எழுதிட வலது கையைப் பயன்படுத்துகிறோம். வலது – இடது என இருகையாலும் மாணாக்கர்களுக்கு எழுதப் பயிற்சி தரும் நாடு ஜப்பான்.

* உலகிலேயே கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படும் நாடு இஸ்ரேல்.

* உலகிலேயே காபி அருந்தும் நபர்கள் அதிகம் உள்ள நாடு அமெரிக்கா.

* தேசியக்கொடி இல்லாத நாடு மாசிடோனியா.

* பனி மலைகள் அதிகம் நிறைந்த நாடு சுவிட்சர்லாந்து.

* உலகிலேயே மிகப்பெரிய வைரச்சுரங்கத்தின் பெயர் தென்னாப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி.

* உலகிலேயே மிகப்பெரிய அணை அமெரிக்காவிலுள்ள கிராண்ட் கெளல் அணை.

* பசிபிக் பெருங்கடலின் சாவி என்று அழைக்கப்படும் நகரம் சிங்கப்பூர்.

* 'தங்க ரதங்களின் நாடு' என அழைக்கப்படுவது மியான்மர்.

* 'ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்' என அழைக்கப்படும் நாடு சுவிட்சர்லாந்து.

*'ஐரோப்பாவின் போர்க்களம்' என அழைக்கப்படும் நாடு பெல்ஜியம்.

*'வெள்ளை யானைகளின் நாடு' என அழைக்கப்படுவது தாய்லாந்து.

*'ஐரோப்பாவின் நோயாளி' என அழைக்கப்படும் நாடு துருக்கி.

* 'ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு' என அழைக்கப்படுவது பின்லாந்து.

* நதிகளே இல்லாத நாடு சவூதி அரேபியா.
* பட்டாம்பூச்சிகளின் சரணாலயம் 'மெக்சிகோ'.
   தொடரும்

பூமி தினம் ஏப்ரல் 22

பூமி தினமானது ஆண்டு தோறும் ஏப்ரல் 22 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் கலந்து கொண்டவர்களுள் ஒருவரான ஜான் மெக்கானெல் என்பவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்தார். ☘

மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்தார். ☘

அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும், மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்ப 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்த அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள்.

அன்றிலிருந்து ஆண்டுதோறும் பூமி தினம் 175 நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மனித உடல் மகத்துவம்

* மனித மூளையின் நிறம் சாம்பல் நிறம்.

* ரத்தவகை ஆயுள் முழுவதும் மாறாது.

* மனித உடலில் வினாடிக்கு 15 மில்லியன் ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன. அதேசமயம் அழியவும் செய்கின்றன.

* மனித உடலில் உள்ள ஐம்புலன்களின் உறுப்புகளில் கடைசியாகச் செயலிழப்பது காது.

* இடது நுரையீரலை விட அதிகமான காற்றை வலது நுரையீரல் உள் வாங்குகின்றது.

* நமது தலையின் எடை அளவு 3,175 கிலோ கிராம்.

* நமது உடலில் 600 தசைகள் உள்ளன.

* நமது உடலில் இருக்கும் கொழுப்பைக் கொண்டு 7 சோப்புகள் செய்யலாம்.

* மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.

* மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும் தன்மையுடையது.

* மூளையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் சத்துப்பொருட்கள் புரதச்சத்து ஆகும்.

* ‘மெலனின்’ என்று ஒரு ரசாயனப் பொருள்தான் நமது உடம்பின் தோலுக்கு நிறம் கொடுக்கிறது.

* ஒரு நாளில் நமது இரத்தம் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது. நுரையீரல்கள் 23 ஆயிரத்து 40 தடவைகள் சுவாசிக்கின்றன. இதயம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 689 தடவைகள் துடிக்கிறது.

* குழந்தை பிறந்த போது 270 எலும்புகள் இருக்கும். பிறகு சேர்ந்து 206 எலும்புகள் நிலைக்கும்.

* கோபம் மிகும்பொது முகத்திலுள்ள சிறு நாளங்கள் விரிந்து அதிக இரத்தம் பாய்கிறது. அதனால் முகம் சிகப்பாகிறது.

* நம் உடலில் அதிகம் உள்ள சுரப்பி வியர்வைச் சுரப்பிகளே. ஏறத்தாழ 20 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.

* 'ஆக்சிஜன் படகு' எனப்படுவது ஹீமோகுளோபின்.

* மனித உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன. * நம் உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை 830.

* நமக்கு களைப்பு ஏற்படும்போதும், மூளை சோர்வு அடையும்போதும், இதனை நமக்கு அறிவிக்கும் செயலே கொட்டாவி ஆகும்.

* நமது உடலில் வியர்க்காத பகுதி உதடு.

* நாம் தூங்கும்போது எல்லா உறுப்புகளும் ஒரே நேரத்தில் ஓய்வெடுப்பதில்லை. முதலில் கண்கள், பின்பு காது, தோல் என ஒவ்வொன்றாக ஓய்வெடுக்கத் துவங்கும்

அறிந்ததும் அறியாததும்

* சுதந்திர இந்தியாவில் ஓட்டுரிமை உண்டு. 1956 இந்தியன் சட்டப்படி 21 வயதிற்கு ஓட்டுரிமை. திருத்தம் செய்யப்பட்டு தற்போது 18 வயதிற்கு ஓட்டுரிமை உண்டு. அதே அரசியல் சட்டம் ஒருவருக்கு தனது ஓட்டை செலுத்தாமல் இருக்கவும் உரிமை தருகிறது. அவர் வாக்குச்சாவடிக்குள் சென்று கூட ஓட்டுப்போடாமல் திரும்பலாம். அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. விதிகள் 41-O மற்றும் 49-O. இதனை அளிக்கிறது.

* 'இந்தியாவின் அணிகலன்' என்று அழைக்கப்படும் மாநிலம் மணிப்பூர்.

* கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் நாசிக்.

* இந்தியாவின் இணையற்ற கவிஞர் தாகூர். இவரது இயற்பெயர் ரவீந்திரநாத் தாகூர் என்றுதானே நினைக்கிறோம். அவரது இயற்பெயர் ‘பானுசின்கா’ என்பதாகும்.

* இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவின் பெயர் கிறிஸ்துமஸ் தீவு. 1643. கிறிஸ்துமஸ் நாளில் இது கண்டுபிடிக்கப் பட்டதால் இப்பெயர் வந்தது.

* இந்தியா விமான சர்வீஸ் AIR INDIA, - INDIAN AIRLINES என்று இருவிதமாக அழைக்கப்படுவது ஏன்? ஏர் இந்தியா என்பது வெளிநாட்டு விமானப் போக்குவரத்து, ஏர்லைன்ஸ் என்பது உள்நாட்டுப் போக்குவரத்தின் பெயர்.

* இந்தியாவில் சமூக சீர்திருத்தம் என்பதற்கு வித்திட்டவர் ராஜாராம் மோகன்ராய். சாதி ஒழிப்பு – பால்ய விவாகம் தடுப்பு, சதி என்ற உடன் கட்டை ஏறுதலை தடுத்தல் இவர் தொடங்கி வைத்ததே. இவருக்கு துணையாக நின்றவர் அப்போதைய ஆங்கிலக் கவர்னர் பெண்டிங் பிரபு.

* முழுக்க முழுக்க கல்வி வளர்ச்சிக்கென மட்டுமே பயன் தரும் செயற்கைக்கோள் என்பதை முதன்முதலில் இந்தியா விண்ணில் அனுப்பியுள்ளது. எந்த உலக நாடுகளும் இதுவரை இத்தைகைய செயற்கைக்கோளை அனுப்பியதில்லை. இந்த செயற்கைக்கோள் சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா தளத்தில் இருந்து 20.09.2004 அன்று ஏவப்பட்டது. இதனை அனுப்ப, 49 மீட்டர் உயரமும், 3 அடுக்குகளையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.எப்.டி. ராக்கெட் மூலம் இது அனுப்பப்பட்டது. 17 நிமிடத்தில் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்தது. இந்த செயற்கைக்கோள் 1950 கிலோ எடை உள்ளது. பல்வேறு பல்கலைக் கழக, தொலைதூரக் கல்விக்குப் பயன்படும். ‘எஜுசாட்’ என்பதே இந்த செயற்கைக்கோள். இந்திய அறிவியல் திறனுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

* உலகின் பெரிய, பழமையான பல்கலைக்கழகம் வட இந்தியாவில் இருந்தது. இருந்த இடம் தட்சசீலம். காலம் கி.மு. 700. உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர். மருத்துவம். கணிதம், வான சாஸ்திரம், தர்க்கம், தத்துவம் எனப் பல்துறைப் படங்கள் போதிக்கப்பட்டன. ஏறத்தாழ 60 வகை படிப்புகள், 10,000 மாணவர்கள் பயின்றனர். கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் சிறப்பிடம் பெற்றது, புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம்.

* எண் கணிதத்தில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 இதுவும், (௦) பூஜ்யமும் இந்தியா உலகிற்கு அளித்த நன்கொடை. இந்தோ – அரேபியா முறை என இது வழங்கப்படுகிறது. வெளியுலகிற்கு இதனை அறிமுகம் செய்தவர்கள் அரேபியா வணிகர்கள். அதுபோல அல்ஜிப்ரா கணிதமும் இந்தியா வழங்கியதே.

* உடல் பருமன் அதிகமுள்ள மக்கள் வசிக்கும் உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

* இத்தாலி – பைசா நகரில் ஒரு சாய்ந்த கோபுரம் இருப்பதும், அது உலக அதிசயத்தில் ஒன்று என்பதும் தெரியும். ஒரு சாய்ந்த கோபுரம் இந்தியாவிலும் உள்ளது. ஒரிஸா மாநிலத்தில் ஹியூமா என்ற கிராமத்தில் இது உள்ளது. 47 கோணத்தில் இது சாய்வாக உள்ளது. 1670 கி.பி.யில் பளியர்சிங் என்ற அரசரால் கட்டப்பட்டது.

* இந்தியாவின் தலைநகர் புதுதில்லி 1911-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

* நமது தேசியக் கொடியை உருவாக்கியவர் பிக்காஜி ருஸ்தம்காமா இதில் நடுவே அசோகச் சக்கரமா? ராட்டையா? என்ற சர்ச்சை எழுந்தது. மகாத்மா காந்தி ராட்டையை வைக்கவே விரும்பினார். ஆனால் அம்பேத்கார் அசோகச் சக்கரம் இருக்க ஆசைப்பட்டார். இறுதியில் காந்தி விட்டுக்கொடுக்க, அம்பேத்கார் விருப்பமே நிறைவேறியது.

* பால்வளப் பெருக்கம், வெண்மைப் புரட்சி எனப்படுகிறது.
இந்தியாவில் பால்வளப் புரட்சிக்கு வித்திட்டவர் வர்கீஸ் குரியன் என்பவர். பசுமைப் புரட்சி உணவு உற்பத்தி. நீலப்புரட்சி கடல் வலப் பாதுகாப்பு.

* தில்லி நகருக்கு ‘புதுதில்லி’ என்ற பெயர் 1931 –ஆம் ஆண்டு சூட்டப்பட்டது.