கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, July 30, 2016

கடவுளுக்கு தூக்கம் வருமா?

கடவுளுக்கு தூக்கம் வருமா ?

 சீடன் ஒருவன் தன் குருவிடம், குருவே நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம், கடவுளுக்கு தூக்கம் வருமா, வராதா? என்றுக் கேட்டான்.

அதற்கு குரு புன்னகைத்தவாறே அவனிடம் ஒரு கண்ணாடியை எடுத்து வரச் சொன்னார்.

 இந்தக் கண்ணாடியை கையில் பிடித்தபடி நின்று கொண்டிரு. கண்ணாடிக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்றார் ஞானி.

சீடனும் அப்படியே நின்றான். சற்று நேரத்தில் அவனுக்கு தூக்கம் வந்துவிட்டது. அதிலிருந்து விடுபட பல முயற்சி களைக் கையாண்டான். ஆனால் அது அவனுக்கு பலன் அளிக்க வில்லை.  

தன்னை மறந்து ஒரு வினாடி கண்ணயர்ந்தான். கண்ணாடி கீழே விழுந்து சிதறியது. பதறிப்போன சீடன் கலவரத்துடன் குருவை பார்த்தான்.

பயப்படாதே சீடனே நீ ஒரு வினாடி கண் அயர்ந்ததால் உன் பொறுப்பில் இருந்த கண்ணாடி சின்னாபின்னமாகி விட்டது.  இந்த பிரபஞ்சம் முழுவதையும் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் இறைவன் கண்ணயர்ந்தால் இந்த உலகம் என்ன ஆகும்? என்று யோசித்துப் பார் என்று கூறியதும் சீடனின் சந்தேகம் தெளிவானது.

படித்ததில் பிடித்தது

மகிழ்ச்சி குருவும் சீடனும்

குருவும், சீடனும்  குருவே!

என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்றான், சீடன்,
உடனே குரு அவனை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பட்டாம் பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்ததை, இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா! என்று குரு அவனிடம் சொன்னார்.

 அவன் பட்டாம் பூச்சியைத் துரத்திக் கொண்டு ஓடினான். ஆனால், அவனால் பிடிக்க முடியவில்லை.

பரவாயில்லை வா நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம் என்று குரு, அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். இருவரும் அங்கு அமைதியாக நின்று, தோட்டத்தின் அழகைக் கண்குளிரப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.  

சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. சற்று நேரத்திற்கு முன்பு அவன் பிடிக்கத் சென்ற பட்டாம்பூச்சி, இப்போது அவன் கைகளிலே வந்து அமர்ந்தது.

அப்போது குரு சிரித்தபடி அவனிடம் சொன்னார். இதுதான் வாழ்க்கை! மகிழ்ச்சியைத் தேடி ஓடுவதை விட, நாம் வாழ்க்கையை அமைதியாக ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும் என்றார்.

குரூப் 4 தேர்வு 5451 காலிபணியிட அறிவிப்பு 15 நாளில் வெளியாகும்

குரூப்-4 தேர்வு அறிவிப்பு 15 நாட்களில் வெளியாகும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பேட்டி

5,451 காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு இன்னும் 15 நாட்களில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார்.

74 காலிப்பணி இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வை நடத்தி வருகிறது. 19 துணை கலெக்டர்கள், 26 போலீஸ் துணை சூப்பிரண்டு, 21 உதவி வணிகவரி அலுவலர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய 74 காலிப்பணி இடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி நடந்தது.

அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்,அடுத்தக்கட்டமாக முதன்மை தேர்வு எழுத வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அந்தவகையில், முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது. தேர்வு மையம் சென்னையில் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தது.

சென்னை திருவல்லிக்கேணி, பி.வி.நாயக்கன் தெருவில் உள்ள சி.எஸ்.ஐ. கெலட் மேல்நிலைப்பள்ளியில் ஒரு தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த தேர்வு மையத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய
(டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் கே.அருள்மொழி பார்வையிட்டார். கை, கால் நடுக்கத்தால் தேர்வு எழுத முடியாத அருண்குமார் என்பவர், மற்றொருவர் உதவியுடன் தேர்வு எழுதினார். அவரையும் பார்த்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமாரும் அவருடன் இருந்தார். தேர்வு மையத்தை பார்வையிட்ட கே.அருள்மொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

குரூப்-1 முதன்மை தேர்வு முடிவை சுமார் 5 மாதங்களுக்குள் வெளியிட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்வு வருகிற 9, 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வு அறிவிப்பு குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு சுமார் 15 அல்லது 20 நாட்களில் வெளியாகும். இந்த தேர்வு மூலம் 5 ஆயிரத்து 451 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 29 இளநிலை அறிவியல் அலுவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு இன்று (நேற்று) வெளியிடப்பட்டு இருக்கின்றன.

சிறை அலுவலர், மீன்துறை துணை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை-4 மற்றும் நிலை-3 பதவிகளுக்கான தேர்வுகளும் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, July 28, 2016

வாழ்க்கை வெற்றி ரகசியம்

திருமண வாழ்க்கையில் வெற்றியின் ரகசியம்

திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சினையுமின்றி வாழ்ந்த ஜோடிகள் தான் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள்.

ஊரையே கூட்டி தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் பத்திரிக்கையாளார் ஒருவர், அவர்களுடைய பேட்டியை பத்திரிக்கையில் தெறிவிக்க விரும்பினார்.  

நேராக அந்த தம்பதியர்களிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம்.இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டார்.

இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.

 நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக ஷிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது.அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம்.

அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் தனித்தனி குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமான குதிரையாக இருந்தது.

திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது.  அவள் எழுந்து அந்த குதிரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டு, இதுதான் உனக்கு முதல் முறை என்று அமைதியாகக் கூறினாள்.

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து மீண்டும் குதிரையின் மீது அமர்ந்து கொண்டு இதுதான் உனக்கு இரண்டாம் முறை என்று கூறி பயணிக்கத் தொடங்கினாள்.

 மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்றுவிட்டாயே? அறிவில்லையா? என்று கேட்டேன்.

அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, இதுதான் உங்களுக்கு முதல் முறை என்றாள். அவ்வளவுதான், அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார்., அந்த கணவர்.

படித்ததில் பிடித்தது

நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை ஸ்டிரைக் - 10 லட்சம் பேர் பங்கேற்பு

நாடு முழுவதும் நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இது தொடர்பாக கடந்த 26ம் தேதி தலைமை தொழிலாளர் ஆணையர் அனில்குமார் நாயக் தலைமையில் டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 9 வங்கி யூனியன்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இந்திய வங்கியாளர் சங்க அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டப்படி நாளை ஒரு நாள் வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதில் அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், வங்கி அதிகாரிகள் சங்கம் உள்பட 9 சங்கங்களில் இருந்து 10 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். இது தொடர்பாக, சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம், இணைச்செயலாளர் விஜயகுமார் கூறியதாவது :

கடந்த மே மாதம் 11ம் தேதி அகில இந்திய வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஐதராபாத்தில் கூட்டம் நடந்தது. இதில் 9 வங்கி யூனியனை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், “பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை நிறுத்த வேண்டும், வங்கி சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகள் மீது திணிக்கும் கொள்கைகளை கைவிட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 29ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

தலைமை தொழிலாளர் நல ஆணையர் அனில்குமார் நாயக்குடன் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுங்கள் என்று கூறுகிறார்களே தவிர, எங்கள் கோரிக்கை தொடர்பாக எந்த உத்தரவாதமும் வழங்க முன்வரவில்லை.

இதனால், நாளை திட்டமிட்டப்படி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் 43 வணிக வங்கிகள், 50 கிராமிய வங்கிகள், நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வங்கிகள் ஸ்டிரைக் காரணமாக நாளை பண பரிவர்த்தனைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Wednesday, July 27, 2016

புத்திசாலிதனத்தால் உயிர் பிழைத்த குரங்கு

முட்டாள் முதலையும் புத்திசாலிக் குரங்கும்

ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்.

 ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை, தாங்களால் கொண்டு வரமுடியுமா? என கேட்டது.

 ஆண் முதலை யோசித்தது என்ன செய்வதென்று, திடீரென ஒரு யோசனை வந்தது. சரி நான் கொண்டு வருகிறேன் என சம்மதித்தது.

நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம். அவனும் வருவான் கொன்று அவன் இதயத்தை சாப்பிடு என கூறியது.

அதனை கேட்ட பெண் முதலைக்கோ அளவு கடந்த சந்தோசம்.  

அடுத்த நாள் ஆண் முதலை, குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்தது முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது.  

நடு ஆற்றில் சென்றுக் கொண்டிருக்கும் போது ஆண் முதலை கூறியது, இப்போ நாம் எங்கே செல்கிறோம் தெரியுமா எனக் கேட்டது. அப்பாவி குரங்கு விருந்துக்கு தானேன்னு சொன்னது.  

முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னை கூட்டிகிட்டு போறேன் எனக் கூறியது.

குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.  

சற்று யோசித்த குரங்கு, அடடா என்ன நண்பா இதை முன்னாடியே சொல்லகூடாது? நேத்து தான் என் இதயத்தை எடுத்து காயபோட்டேன்.

அது அங்கேயே இருக்கின்றது எனக் கூற முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துக்கொண்டு வருவோம்னு திரும்பவும் கரைக்கு வந்து விட்டது.

 தப்பித்த குரங்கு முதலையிடம் கூறியது, முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொல்ல பார்கிறாயான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி போயிடுச்சாம். 

நீதி
எதையும் ஆராயாமல் செய்தால் ஆபத்தில் தான் முடியும்

பொறுமையால் கிடைத்த பொற்காசு

ஏழ்மையிலும் நேர்மை

ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யாததால், அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர்.

நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்று தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு வேண்டினர்.

 இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்! என்றார்.

 மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டும் என்றார்.

 மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான்.

 பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

 இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர், ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.

தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.  அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி.

ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்! என்றாள்.

மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர்.
சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள்.

மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வந்தர்.

துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

நீதி

பொறுமை, நேர்மை இரண்டும் இருந்தால் எதிலும் நிச்சயம் வெற்றி பெறலாம்.

படித்தில் பிடித்தது

என்றும் சேராத பூனையும் எலியும்

பூனையும் எலியும்

ஒரு ஊரில் சக்தி என்றொருவன் இருந்தான். அவன் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் எலியைப் பிடிக்க பூனை ஒன்றை வளர்க்க ஆரம்பித்தான்.

பூனை வந்ததும் எலிகளால் முன்பு போல தானியங்களை திருட முடியவில்லை. பூனையை விரட்ட வேண்டும் அல்லது நண்பனாக்கி கொள்ள வேண்டும் என்று ஒரு எலி தன் கூட்டத்தினரிடம் கூறியது.

அதற்கு ஒரு கிழட்டு எலி பூனை நம் ஜென்ம விரோதி. அதை நண்பனாக்கா வேண்டாம். அதை விரட்டுவதும் நம்மால் முடியாது. அதனால், நாம் வேறு இடத்திற்கு செல்லலாம் என்றது.

 கிழட்டு எலி சொல்வதைக் கேட்டு மற்ற எலிகள் வீட்டை காலி செய்தது.

ஆனால் பூனையை நண்பணாக்கி கொள்ளவேண்டும் என்று சொன்ன எலி மட்டும் போகவில்லை. எப்படியாவது பூனையை நண்பனாக்கிக் கொண்டு கூட்டுக் கொள்ளையடிக்கலாம் என்று அவ்வீட்டிலேயே தங்கி விட்டது.

ஒருநாள் அந்த எலியை பூனை பிடித்து விட்டது. பூனையிடம் மாட்டிய எலி, பூனையாரே என்னை விட்டுவிடு. நான் உன் நண்பனாக விரும்புகிறேன்.

என்னை விட்டு விட்டால் உனக்கு தினமும் விதவிதமான தின்பண்டங்களைத் தருகிறேன். மேலும் உனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் தானே கிடைக்கிறது என்று ஆசை வார்த்தைகள் கூறியது.

பூனையோ, ஏ எலியே எனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் போதுமானது. நீ நாளை தரும் தின்பண்டத்திற்கு ஆசைப்பட்டு இன்று கிடைக்கும் உனது கறியை இழக்க நான் முட்டாளில்லை என்று சொல்லி எலியைக் கொன்று ருசித்தது சாப்பிட்டது.

நீதி

எதிரிகளிடம் நியாயம் எதிர்பார்பது தவறு.

படித்ததில் பிடித்தது

கலாமின் கனவு வழிகாட்டால்

* அழகைப்பற்றி கனவு காணாதீர்கள், அது உங்களின் கடமையை பாழாக்கிவிடும்

* கடமையைப்பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும். முட்டாள் தனது முட்டாள் தனத்தை விளங்கிக்கொள்வதால் புத்திசாலியாகிறான்

* புத்திசாலி தனது புத்தியை விளங்கிக்கொள்வதால் முட்டாளாகிறான் கஷ்டம் வரும்போது கண்ணைமூடாதே அது உன்னை கொன்றுவிடும்

* கண்ணை திறந்துபார் அதை நீ வென்றுவிடலாம். நாம் அனைவரும் ஒரே மாதிரி திறமையில்லாதவர்களாக இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.

*சிக்கல்களை எதிர்கொள்ளும்போதே சில திறமைகள் வெளிப்படுகின்றன.

* வாய்ப்புக்காக காத்திராதே...... வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்........ கனவு என்பது தூங்கும் போது வருவதல்ல, உன்னை தூங்கவிடாமல் பண்ணுவதேயாகும்.

* ஒரு நிஜமான தலைவன் தோல்வி காணும்போது அத்தோல்வியை தன்னுடையதாக கருதுவான். வெற்றி எனும்போது அது தன்னுடைய குழுவின் வெற்றியாக கொண்டாடுவான்.

* நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார்முன்னேயும்,எப்பேதுமே மண்டியிடுவதில்லை.

* சிந்திக்கத் தெரிந்தவனக்கு ஆலோசனை தேவையில்லை,துன்பங்களை சந்திக்கத்தெரிந்தவனக்கு தேல்வியேயில்லை.

* நேர்மை மற்றும் உண்மை இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் முடியாது என்ற நோய் முற்றாக மறந்துவிட வேண்டும் இல்லாவிடில் முடியுமானவற்றை அடைந்திருக்க முடியாது.

* மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவை

*சிந்தனை செய், தெளிவான முடிவை எடு "நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால் நீ யார் என்பது முக்கியமல்ல, உனது மனது எதை விரும்புகிறதோ அது நிச்சயம் உன்னை வந்து சேரும்"
படித்ததில் பிடித்தது

Tuesday, July 26, 2016

தெனாலி ராமனின் புத்திசாலித்தனம்

காளியிடம் வரம் பெற்ற கதை  ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்று}ரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தார். தெனாலிராமன். இளமையிலேயே தன் தந்தையை இழந்தார்.

அதனால் அவரும், அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்தனார், அவருடைய தாய் மாமன் ஆதரவில் தான் வாழ்ந்து வந்தார்கள்.  தெனாலி ராமனுக்குப் படிப்பு என்பது வேப்பங்காயாக காசந்தது. இருந்தாலும், அவர் மிகவும் புத்திசாலியானவர், நல்ல நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்.

அவர் தந்தை இறந்தால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.  இந்நிலையில் தெனாலிராமனைக் காண ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிலையைக்கண்டு மிகவும் வருந்தினார்.

அதன் பிறகு அவருக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். அந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தால் காளி பிரசன்னம் மாவாள் என்றார்.  அதன்படியே இராமனும் கோயிலுக்குச் சென்று தன் கண்களை மூடிக் முனிவர் சொன்ன மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்கினார்.

இரவு, பகல் பாரமல் ஜெபித்ததால் உடனே காளி அவர் எதிரே தோன்றினாள். உனக்கு என்ன வேண்டும்? என கோபமாகக் கேட்டாள் காளி.

அவளை வணங்கி எழுந்த இராமன் கைகளைக் கூப்பித் தொழுதவாறே கேட்டான்.

தாயே என் வறுமை அகலும் வழியும், எனக்கு நல்லறிவும் தர வேண்டுகிறேன்.  

உடனே காளி உனக்குப் பேராசைதான். கல்வியும் வேண்டும், செல்வமும் வேண்டுமா? என்றாள்.

ஆம் தாயே..! புகழடையக் கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும். இரண்டையும் தந்து அருள் செய்ய வேண்டும் தாயே, என்றான்.

பிறகு காளி இரண்டு கிண்ணங்கள் பாலுடன் வந்தாள். அதை இராமனிடம் தந்தாள் காளி. இராமா! இந்த இரண்டு கிண்ணங்களிலும் உள்ள பால் மிகவும் விசேஷமானது.  ஆனால் நீ ஏதவாது ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தான் குடிக்க வேண்டும். உனக்கு எது மிகவும் தேவையோ அந்தக் பாலை மட்டும் குடி என்றாள் புன்னகையுடன்.

என்ன தாயே! நான் இரண்டையும் தானே கேட்டேன் என்றான். நான் எதை அருந்துவது தெரியவில்லையே, என்று சிறிது நேரம் யோசித்து விட்டு, பிறகு சட்டென்று இடது கரத்திலிருந்த பாலை வலது கரத்திலிருந்த கிண்ணத்தில் ஊற்றி, அந்த கிண்ணத்துப் பாலை குடித்து விட்டுச் சிரித்தான்.

காளி திகைத்து நின்றாள்.  நான் உன்னை ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்!

ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன். என்றான்.

ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?

கலக்கக் கூடாது என்று நீ சொல்லவில்லையே தாயே! என்றான்.

உடனே காளி மகிழ்ந்து இராமானுக்கு! வரம் தந்தால், ராமா நீ புலவன் என்று பெயர் பெறாமல் விகடகவி என்றே பெயர் பெறுவாய் என்று கூறி மறைந்தாள். இராமன் விகடகவி என்ற பெயரை திருப்பிப் படித்தாலும் விகடகவி என்றே வருகிறதே என்று மகிழ்ச்சி அடைந்தான்.

நீதி

மதியால் எதையும் வெல்லாம். புத்தியுள்ளவர்கள் எங்கு சென்றாலும் தன் திறமையினால் தனக்கு சாதகமாகக் மாற்றிக் கொள்வார்கள்.