கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, September 30, 2016

எங்க தாத்தா போல

ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான், ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது.

பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை.

பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள்.

அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்' என்றார்.

உடனே அந்தப் பையன் "நீங்க என்ன, என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க?" என்றான் கோபத்தோடு.

டாக்டர் வாயே பேசவில்லை. குழந்தைகள் என்றும் குழந்தைகளே!

ஆண் என்பவன்

ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது ========

ஆண் என்பவன்... கடவுளின் உன்னதமான படைப்பு.

சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..

பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்

காதலிக்கு பரிசளிக்க, தன் பர்ஸை காலி செய்பவன்

மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகு வைத்து அலட்டிக்கொள்ளாமல் அயராது உழைப்பவன்.

எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..

இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன் அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்

அவன் வெளியில் சுற்றினால், 'உதவாக்கரை' என்போம்.

வீட்டிலேயே இருந்தால், 'சோம்பேறி' என்போம்.

குழந்தைகளை கண்டித்தால், 'கோபக்காரன்' என்போம்,

கண்டிக்கவில்லை எனில், 'பொறுப்பற்றவன்' என்போம்.

மனைவியை வேலைக்கு செல்ல, அனுமதிக்காவிடில் 'நம்பிக்கையற்றவன்' என்போம்,

அனுமதித்தால் 'பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன்' என்போம்..

தாய் சொல்வதை கேட்டால், 'அம்மா பையன்' என்போம்;

மனைவி சொல்வதை கேட்டால், 'பொண்டாட்டி தாசன்' என்போம்

ஆண்களின் உலகம், தியாகங்களாலும் வியர்வையாலும் சூழப்பட்டது.

பெண்களின் மாத விலக்கு பிரட்சனைக்கு

மாதவிலக்கு பிரச்னைக்கான மருத்துவ முறைகள்

நலம்தரும் நாட்டு மருத்துவத்தில், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்னைக்கு தீர்வுகாண்பது குறித்து பார்க்கலாம்

குழந்தைபேறுக்கு மாதவிலக்கு முக்கிய அம்சமாக விளங்குகிறது. மாதவிலக்கு முறையாக இல்லாமல் இருப்பதால் பல்வேறு பிரச்னைகள் உண்டாகிறது.

மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கால் ரத்த சோகை ஏற்படுகிறது.

மாதவிலக்கு பிரச்னைக்கு வில்வம், அத்தி, மாதுளை போன்றவை அற்புதமான மருந்தாகிறது.

எளிதாக கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருத்துவத்தை பார்க்கலாம்.

மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

அத்திமரப்பட்டை, மாமரப்பட்டை, மாதுளை, பனங்கற்கண்டு. அத்திமரப்பட்டை, மாமரப்பட்டை ஆகியவற்றை சுத்தப்படுத்தி ஒரு கைப்பிடி அளவுக்கு எடுக்கவும்.

இதனுடன் மாதுளம் பழத்தின் தோல், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை என இருவேளை 100 மில்லி அளவுக்கு குடித்துவர அதிக உதிரப்போக்கு கட்டுக்குள் வரும்.

இந்த தேனீர் மூலம் நோய்க்கு மருந்தாக அமைகிறது. மாமரம் மற்றும் அத்தி மரத்தின் பட்டை, மாதுளை ஆகியவை மாதவிலக்கு பிரச்னைக்கு நல்ல பலன் தருவதாக அமைகிறது.

வில்வ இலையை பயன்படுத்தி அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

வில்வ இலை, செம்பருத்தி. 50 முதல் 100 மில்லி அளவுக்கு குளிர்ந்த நீர் எடுக்கவும். இதில், சிறு நெல்லிகாய் அளவுக்கு வில்வ இலை பசை சேர்க்கவும். சிறு நெல்லிக்காய் அளவுக்கு செம்பருத்தி பூ பசை சேர்க்கவும். பின்னர், நன்றாக கலந்து காலை, மாலை என இருவேளை குடித்துவர அதிக உதிரப்போக்கு நிற்கும்.

செம்பருத்தி துவர்ப்பு சுவை உடையது. பல்வேறு நன்மைகளை கொண்ட செம்பருத்தி மாதவிலக்கு பிரச்னையை சரிசெய்கிறது. துவர்ப்பு சுவை உடைய பொருட்கள் ரத்தத்தை கட்டுப்படுத்த கூடியது.
ரத்தத்தை கெட்டிப்படுத்தும் தன்மை கொண்டவை.

மாசிக்காயை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாசிக்காய், தேன். அரை ஸ்பூன் அளவுக்கு மாசிக்காய் பொடி எடுக்கவும். இதனுடன் தேன் சேர்த்து கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர அதிக உதிரப்போக்கு கட்டுக்குள் வரும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மாசிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.

Thursday, September 29, 2016

இனி இந்த நிலை மாறுமா ?

ஒரு அருமையான சிந்திக்கவைத்த பதிவு,...

முன் கடந்து போவோரின் முகம் காண முடியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் எனக்கு புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம்.

தொடுதிரையை தொட்டபடி உள்ளங்கையில் தான் உலகம். என் கைபேசி காதலியானாள்- நான் கட்டிய மனையாள் நெடுந்தூரம் போனாள்...

உற்றாரும் உறவினரும் Family குரூப்பில், நண்பனும் அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில்.

சாம கோழி கூவிய பின்னும், கொக்கரக்கோ கேட்கும் முன்னும், இணையத்தில் மூழ்கலானேன்-நிஜமெனும் வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன்.

எவர் எவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து,.அடுத்தவர் இழப்பிற்கு துக்கச்சேதி. Hi என எவரோ அனுப்ப Hai என பதிலுரைத்தேன்-ஏனோ நான் பெற்ற பிள்ளை "அப்பா"என்றழைக்க, சற்றே புருவம் உயர்த்தி பார்வையாலே சுட்டெரித்தேன்...

அடுத்தவரின், Status பார்த்து ரசித்தேன், profile பார்த்து வியந்தேன், Picture Msg பார்த்து லயித்தேன், video பதிவிறக்க ஆர்வத்தில். கை அலம்பியபின் யோசித்தேன்.

நான் என்ன சாப்பிட்டேன் என்பதை...அமிர்தம் தந்த மனையாளிடம் அடுத்தடுத்து சண்டையிட்டேன்... நானாய் சிரித்தேன், நானாய் அழுதேன், நானாய் வியந்தேன், நானாய் ரசித்தேன்-ஏனோ நான், நானாய் மட்டும் இல்லை...

ஆண்ட்ராய்டில் அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன். என் குடும்பம் விலகி போவதை கண்டும் கூட Network கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்...

ஈமோஜியில் சிரிப்பு,அழுகை,சோகம்,வெட்கம், ஆடல்,பாடல்,குடும்பம்,நட்பு என அனைத்தும். ஆனால்... நான் நிமிர்ந்து பார்க்கும் போது என் முன்னே எவருமில்லை., சுற்றமும்,நட்பும் உள்ளங்கை உலகத்தோடு எனை கடந்து போயினர்...

இந்த இணைய உலகம்-போதும் சொந்தமே.,

இனி என்னோடு நேரினில் புன்னகையிடுங்கள். நட்பே., வா தெருவோர டீக்கடை நமக்காய் தவம் தவம் கிடக்கிறது.......

படித்ததில் பிடித்தது

துளசி வளர்ப்பீர் துன்பமில்லா வாழ்க்கைக்கு

ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி 

நீங்கள் மரத்தை நட வேண்டாம் , இந்த துளசியையாவது நடுங்கள் !!!

சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள் தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.

ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

அரசமரம், மூங்கில், துளசி இவை மூன்றும் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை.

இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும்.

ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டியும், வீட்டின் ஜன்னல் பகுதியுமே போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி.

துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.

துளசிச் செடியை வீடுகளில் வைத்தால் சுத்தமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிற்போக்குத்தனமான பேச்சுகளை புறந்தள்ளிவிட்டு, துளசியை வீடுகள் தோறும் வளர்க்க வேண்டும்.

பூமியில் கரியமில வாயுவை தற்போதுள்ள 400 பிபிஎம் என்ற உயரிய நிலையில் இருந்து 350 பிபிஎம் என்ற சாதாரண நிலைக்கு குறைக்க 72 கோடி அரச மரங்கள் (அல்லது) 720 கோடி மூங்கில் மரங்கள் (அல்லது) 7,200 கோடி துளசிச் செடிகள் தேவை.

இதில் நம் ஒவ்வொருவரது பங்களிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் 16 துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.

Wednesday, September 28, 2016

வாழ வைத்த கலை

ஒரு வயலின் வித்வான் இருந்தார். அவர் குடும்பத்தின் அன்றைய சூழலில் `கலையாவது கத்தரிக்காயாவது’ என்ற சொல்லக்கூடிய அளவுக்கு குடும்பத்தில் வறுமை ஆட்டிப் படைத்தது. அதனால் வயலினை பரணில் தூக்கிப் போட்டவர், குடும்பத்துடன் கூலி வேலைக்குப் போய்விட்டார்.

அந்தக் கூலி வேலை முதலில் பெற்றோர் சார்ந்த குடும்பத்தையும், பிறகு மனைவி, பிள்ளைகள் கொண்ட குடும்பத்தையும் பொருளாதாரத்தில் சற்றே தாங்கிப் பிடிக்க உதவிற்று.

அவ்வளவு தான். ஆனாலும் அவருக்குள் ஓரு ஏக்கம். நமக்குள் இருந்த வயலின் கலைஞனை தொலைத்து விட்டோமே என்று உள்ளுர மறுகிக் கொண்டிருந்தார்.

அன்று மாலையில் கிடைத்த நேரத்தில் பக்கத்து ஊரில் நடக்கும் வாரச்சந்தைக்கு போனார். அங்கே ஒரு இளைஞன் பழைய வயலின் ஒன்றை ஏலத்தில் விட இருந்தான்.

அந்த வயலினை வாசித்தே பல நாட்களாகி இருக்கலாம். விற்க வேண்டிய அவசியம் வந்தபோது சந்தைக்கு வந்து விட்டான். அவன் முதலில் பத்து ரூபாயில் இருந்து ஏலத்தை ஆரம்பித்தான். `பழமை மாறாத வயலின்’ என்று சொல்லி அவன் ஏலம் விட்டதில் அடுத்தவர் 20 ரூபாய்க்குக் கேட்டார். இன்னொருவர் ஏலத்தை 30 ரூபாயாக உயர்த்தினார்.

மேற்கொண்டு கேட்க ஆளில்லை. இளைஞனும் கிடைத்தவரை லாபம் என்ற எண்ணத்தில் ஏலத்தை முடித்துக் கொள்ளும் மனநிலைக்கு வந்தான். அப்போது தான் நமது வயலின் வித்வான் அந்தக் கூட்டத்திற்குள் நுழைகிறார்.

இளைஞனை நெருங்கியவர், `வயலின் ஏலம் விடும்போது அதை வாசித்துக் காட்டுவது தானே சரியாக இருக்கும்’ என்றபடி, தன் நெஞ்சோடு வயலினை அணைத்தபடி இசை மீட்டத் தொடங்கினார். அடுத்த சில நிமிடங்களில் அந்த இசை சந்தைக்கு வந்த மொத்தக் கூட்டத்தையும் அங்கே வரவழைத்து விட்டது.

கேட்டவர்கள் மெய்யுருகினார்கள். அடுத்த பாட்டு, அடுத்த பாட்டு என்று தொடர்ந்து மூன்று பாட்டுக்கு வாசித்து முடித்தவர், ஜனங்களை நோக்கி, `இப்போது ஏலம்கேட்கிறவர்கள் கேட்கலாம். ஏலத்தை முதலில் இருந்து ஆரம்பிப்போம்’ என்றார்.

அவரே வயலின் ஏலம் நூறு ரூபாய் என்று ஆரம்பித்தார். வயலின் இசை கேட்டு ஏற்கனவே உருகிப் போயிருந்தவர்கள் பலரும் ஏலத் தொகையை கூட்டிக் கொண்டே போனார்கள். கடைசியில் எண்ணூறு ரூபாய்க்கு கேட்டவருக்கு வயலின் கிடைத்தது.

இளைஞன் இப்போது அந்த பெரியவரை தன் வயலினை விற்றுத்தர வந்த தெய்வமாகவே கருதினான். ஏலப்பணத்தில் 300 ரூபாயை அவருக்கு கொடுக்க முன் வந்தான்.

அவரோ `என்ஆத்ம திருப்திக்கு இசைத்தேன். அதற்கு விலை வைக்காதே’ என்று பணத்தை வாங்க மறுத்து விட்டார். அது மன்னர் ஆட்சிக்காலம். அந்த பெரியவர் அங்கிருந்து நாலடி நடந்திருக்க மாட்டார்.அதற்குள் அரண்மனை வீரர்கள் அவரை சுற்றி வளைத்தார்கள்.

“எங்கள் மன்னரின் அரசவைக்கு தேர்ந்த இசைக்கலைஞர்கள் தேவை. அப்படி ஒருவருக்காக நாங்கள் நகரை வலம் வந்தபோது தான் உமது இசையை கேட்டோம். இப்போதே அரண்மனைக்கு எங்களுடன் வந்து எம் மன்னரை பார்க்கிறீர்” என்று அழைத்து சென்றார்கள்.

அவருக்குள் புகுந்து கொண்டிருந்த அந்தக் கலை கடைசியில் அவரை அரண்மனை இசைக்கலைஞராக்கி அழகு பார்த்தது. இது தான் கலையின் சிறப்பு.

கற்ற கலைக்கு காலம் கடந்தாலும் மரியாதை நிச்சயம். அதனால்கலை தெரிந்தவர்கள் அதை மறைபொருள் போல் மூடி வைக்காமல் வெளிப்படுத்துங்கள், வெளிப்படுங்கள். உலகை வெல்லுங்கள்.

நெஞ்சை தொட்ட கவிதை

இரண்டு கோடிகள் கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்...!!

இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!

இருநூறு கோடிகள் கொடுத்து கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்..!!

இரண்டாயிரம் கோடிகளை கடன் சுமையாய் தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்...!!

இருபதாயிரம் கோடிகளை பொழுதுபோக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்...!!

இரண்டு இலட்சம் கோடிகளுக்கு அலைக்கற்றை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்...!!

எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான் எவருமில்லை....!!

விளைவித்தவன் பிச்சைக்காரன்...!!

விலை வைத்தவன் இலட்சக்காரன்...!!

இப்படிக்கு
*விவசாயின் மகன்*

படித்ததில் பிடித்தது

Monday, September 26, 2016

துறைத்தேர்வு தேர்வு முடிவுகள்

அரசு துறைத்தேர்வு தேர்வின் அனைத்து பாடங்களுக்கும் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

கடுப்பேத்தரார் மை லார்ட்

உங்களை கடுப்பேற்ற..

* பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட் டிரைவருக்குதான்.

* என்னதான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புல நீந்த முடியாது. 

*ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கும், ஆனா ஆயிரம் யானைகள் நினச்சாலும் ஒரு எறும்பையும் கடிக்க முடியாது.

*ரயில்வே ஸ்டேசனில் போலீஸ் ஸ்டேசன் இருக்கலாம், ஆனால் போலீஸ் ஸ்டேசனில் ரயில்வே ஸ்டேசன் இருக்க முடியாது.

* என்னதான் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் துரத்தினால் ஓடித்தான் ஆகணும்.

*  மின்னலை பார்த்தால் கண்ணு போயிடும், பாக்கலன்னா..... மின்னல் போயிடும்..

*நீங்க படிச்சி எந்த சர்டிபிகேட்டும் வாங்கலாம், ஆனால் டெத் சர்டிபிக்கேட்டை வாங்க முடியாது.

* மண்ணிலிருந்து மண்ணெண்ணை எடுக்கலாம், கடலிலிருந்து கடலெண்ணெய் எடுக்க முடியுமா......?

* யானை மீது நாம உக்காந்தா சவாரி, நம்ம மேல யானை உக்காந்தா ஒப்பாரி.

*டீ ஸ்பூனால டீ கலக்கலாம், டேபிள் ஸ்பூனால டேபிளை கலக்க முடியுமா..?....

இன்னைக்கு இது போதும்னு நினைக்கிறேன்....

உங்களால் செய்ய முடியாத செயல்கள்

முடியாது, முடியாது முடியவே முடியாது...

* மெக்கானிக்கல் இன்ஜீனியர் மெக்கானிக் ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜீனியர் சாப்ட்வேர் ஆக முடியாது.

* டீ கப்புல டீ இருக்கலாம்.. ஆனால் வேல்ர்டு கப்புல வேல்ர்டு இருக்க முடியாது.

* எவ்ளோ காசு கொடுத்து பிளேன்ல போனாலும் ஜன்னலைத் திறந்து வேடிக்கை பார்க்க முடியாது..

* லன்ச் பேக்ஸ்ல லன்ச் எடுத்திட்டுப் போகலாம்.. ஆனால் ஸ்கூல் பேக்ல ஸ்கூல எடுத்திட்டுப் போக முடியாது..

* மெழுக வைச்சு மெழுகுவர்த்தி செய்யலாம். ஆனால் கொசுவ வைச்சு கொசுவத்தி செய்ய முடியாது.

* சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வைச்சு எடுத்திட்டுப் போகலாம்.. ஆனா டிபன் கேரியர்ல சைக்கிள வைச்சு எடுத்திட்டுப் போக முடியாது.

* அயர்ன் பாக்ஸால அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸால பென்சில் பண்ண முடியாது.

* கோல்டு செயினை அடகு வைச்சு சைக்கிள் வாங்கலாம்.. ஆனா சைக்கிள் செயினை அடகு வைச்சு கோல்டு வாங்க முடியாது..

குறிப்பு:  என்னாலும் முடியாது.

Sunday, September 25, 2016

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு:

அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி 2 கட்டங்களாக நடைபெறுகிறது சென்னை,மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் - செப்டம்பர் 26 ( நாளை ) முதல் தொடங்குகிறது.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசிநாள் - அக்டோபர் 3-ம் தேதி ஆகும்.  

வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு - அக்டோபர் 4-ம் தேதி.  

வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் - அக்டோபர் 6 தேதி.

தமிழக உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு -

அக்டோபர் 17 (10 மாநகராட்சிகள்),

19-ம் தேதி சென்னை, மற்றும் திண்டுக்கல்,(2 மாநகராட்சிகள் நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை - அக்டோபர் 21 நடைபெறுகிறது.

காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

வெற்றி பெறும் உறுப்பினர்கள் அக்டோபர் 26ம் தேதி பதவியேற்கவுள்ளனர்.

நேரடி தேர்தலுக்கு பின்பு 13,362 பதவிகளுக்கான மறைமுகத்தேர்தல் நடைபெறவுள்ளது.

சென்னையில்19ம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.  வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆறரை லட்சம் பேர் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

 உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 91,098  வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.  நேரடி தேர்தல் முடிவுற்று, மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும்.  தேர்தல் பணிகளை பார்வையிட 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

நேரடி தேர்தலுக்கு பின் 13,362 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலில் 5.8 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால்  இன்று முதல் தேர்தல்  விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

கொஞ்சம் சிரி...

கொஞ்சம் சிரிங்க

சினிமா.

  1) நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா?

நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா..

நண்பர் 1: முடிஞ்ச பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா.

வரம்

2) கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள்.

பக்தன் :நான் தூங்கும்போது சாக வேண்டும்

கடவுள் : ஆகட்டும்.மற்ற ஒரு வரம்?

பக்தன் :எனக்கு தூக்கமே வர கூடாது

கடவுள் : ?????

லோன்

3) மேனேஜர் : எங்க பேங்க் 'ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்.

கிராமத்தான் : கொடுக்கறத கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல சார் . ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க?

என்னதான் இருக்கு ?

4) டாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு பி பி இருக்கா?

நர்ஸ் : இல்ல

டாக்டர் : சுகர் இருக்கா?

நர்ஸ் : இல்ல

டாக்டர் : காய்ச்சல் இருக்கா?

நர்ஸ் : இல்ல

டாக்டர்: ஏன் எதுவும் இல்ல ?

நர்ஸ் : உயிரே இல்ல, அப்புறம் எப்படி இது எல்லாம் இருக்கும்?

ரத்த அழுத்தம் குறைவதற்கு செய்ய வேண்டியன

இரத்த அழுத்தம் குறைய எளிய மருத்துவக் குறிப்புகள்

*தினமும் காலையில் வெறும் வயிற்றில் 4 வெள்ளைப் பூண்டுப் பற்களை சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.

*முள்ளங்கியில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் முள்ளங்கி இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும்.

* இரத்த அழுத்தம் குறைய தினமும் ஒரு வாழைப் பழம் சாப்பிடுவது நல்லது.

* அதுபோல், தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட இரத்த அழுத்தம் குறையும்.

* உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம், நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைத் தவிர்த்து விடுதல் நல்லது. எந்த உணவானாலும், குறைந்த அளவு உப்பை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

* உணவில் அதிகளவு கீரைகள், பழங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* குறிப்பாக குப்பைக்கீரை, முருங்கைக் கீரை, சிறுகீரை போன்றவற்றை சாப்பிடவேண்டும். தினமும் உணவில் கறிவேப்பிலையை அதிகம் சேர்த்துக்கொள்வதும் நல்லது.

*எளிதில் சீரணமாகக்கூடிய உணவை மட்டுமே உண்ண வேண்டும்.

*அதிகம் சத்தம் போட்டுப் பேசுவதை நிறுத்திவிட வேண்டும்.

* தினமும் 45 நிமிடம் நடைப் பயிற்சி செய்வது இரத்த அழுத்தத்தைக் குறையச் செய்யும்.

* தினமும் யோகா மற்றும் தியானம் செய்து வந்தால் இரத்த அழுத்தம் பெருமளவு குறையும்.

* அளவுக்கதிகமாக உள்ள உடற்பருமனைக் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.

* புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை நிறுத்துவதனால் இரத்த அழுத்தம் குறையும்.

Saturday, September 24, 2016

கஞ்சனும் காசும்

ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.

கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.

அவரும் விடாமல்,''நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.

சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்றார்.

உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர் .ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.

குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை.

கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ''எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?''என்று வியப்புடன் கேட்டார்.

அந்தக் கஞ்சனும் பெருமையாக,எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன், என்றான்.

அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,

கஞ்சன் சொன்னான்,என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.

நீதி: என்னதான் இருந்தாலும்... காசேதான் கடவுளடா... (அப்பாடா.. இருநூறு ரூபாய் மிச்சம்)