10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
விருதுநகர் முதலிடம் 10-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட வாரிய தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மாவட்ட வாரிய தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 98.55 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
கன்னியாகுமரி 98.17 சதவீதம் தேர்ச்சி பெற்று 2ஆவது இடத்திலும்,
ராமநாதபுரம் 98.16 சதவீதம் பெற்று 3ஆவது இடத்தில் இடத்திலும்,
ஈரோடு 97.97 சதவீதம் பெற்று 4ஆவது இடத்திலும்,
தூத்துக்குடி 97.16 சதவீதம் பெற்று
5ஆவது இடத்திலும் உள்ளன.
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்விலும் மாவட்ட வாரிய தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment