சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: 27-ந் தேதி வெளியாகிறது
சி.பி. எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 27-ந் தேதி வெளிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு நடத்தும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த 12-ந் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது.
மாநில பாட வாரியத்தின் தேர்வு முடிவுகள் கடந்த காலங்களை விட சிறிது தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய பாடவாரியத்தின் (சி.பி.எஸ்.இ) தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவர்களின் தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது எதிர் பார்ப்பாக உள்ளது.
என்ஜினீயரிங் மற்றும் அரசு கலை கல்லூரிக்கு விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். இன்னும் ஒரு வாரம் வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சி.பி. எஸ்.இ. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வருகிற 27-ந் தேதி வெளிவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment