கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, October 7, 2017

இதை படித்தால் சிரிக்காமல் இருக்க முடியாது

படிங்க...சிரிங்க .

ஒருவன் 50 பேர் மீது லாரி ஏற்றிக் கொன்ற வழக்கில் பிடிபட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்டான்....

நீதிபதி: எப்படி ஆக்ஸிடன்ட் ஆச்சு?

அவன்: ஒரே இருட்டு... நான் 80கிலோ மீட்டர் வேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது, என் லாரி பிரேக் பிடிக்கவில்லை...நான் எவ்வளவோ முயற்சி செய்தும் வண்டியை என்னால நிறுத்த முடியல...

நீதிபதி: அப்புறம்?

அவன்: எனக்கு எதிரே வீதியில ஒரு பக்கம் 2 பேர் நடந்து போனதையும் மற்றொருபுறம் ஒரு கல்யாண ஊர்வலத்தையும் பார்த்தேன்.நீங்களே சொல்லுங்க நீதிபதி ஐயா நான் என்ன செய்திருக்கணும்?

நீதிபதி; கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கணும்...

அவன்: அப்படித்தான் சாமி நானும் நெனச்சு செஞ்சேன்....

நீதிபதி: அப்படினா, வெறும் 2 பேர் தானே செத்திருக்கணும் எப்படி 50 பேர் செத்தாங்க..?

அவன்: அப்படி கேளுங்க நான் # அந்த 2 பேர் மேல மோதினபோது ஒருத்தன் மட்டும் தப்பி அந்த கல்யாண ஊர்வலத்துக்குள்ள ஓடிட்டான்... விடுவனா நான்... அதுல தான் இப்படி ஆயிடுச்சு.....☹

நீதிபதி: ???!!!!

No comments:

Post a Comment