கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, May 31, 2017

SMARTRON SRT MOBILES


 SPECIFICATIONS

 

SMARTRON SRT

 

 

 

BRANT

SMARTRON SRT 32 GB

OS

Android v7.1.1.( NOUGAT )

 

NETWORK

 4G , 3G , 2G

RAM

4 GB

STORAGE INTERNAL @ EXTERNAL

32 GB ,   NO

CAMERA  BACK @ FRONT

13  MP , 5 MP

BATTERY

3000 MAH

WIFI

YES

GPS

YES

BLUETOOTH

YES

FM RADIO

YES

QUICK CHARGING

YES

SIM

DUAL 4G

PRICE

 RS.8 490

FINGER PRINT

YES

LOUD SPAKER

YES

DISPLAY INCH

5.5 INCH

PERFORMENCE

VERY GOOD

 

ஆத்திரத்தால் வந்த ஆபத்து

🦌அது ஒரு சிற்றூர். அதை ஒட்டி ஒரு காடு. அந்த சிற்றூரில் முத்து என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும்போது, அழகான மான்குட்டியைக் கண்டு, அதை தூக்கிக் கொண்டுவந்து வளர்த்தான். அதற்கு வேண்டியதெல்லாம்செய்துகொடுத்து பராமரித்தான்.

ஒருநாள் திடீரென அந்த மான் காணாமல் போனது. பிரியமாக வளர்த்து வந்த மானைக் காணாமல் அங்குமிங்கும் தேடி அலைந்தான். எங்கு தேடியும் கிடைக்காததால், கடும் கோபம் கொண்டான்.

"மானைக் கடத்தியவன் யாராக இருந்தாலும் அவனை சும்மா விட மாட்டேன்" என சபதம் போட்டான். கடத்தியவனைக் கண்ணில் காட்டும் படி கடவுளிடம் உருகி வேண்டினான்.

அடுத்த நிமிடமே கடவுள் அவனுக்கு காட்சியளித்தார். "பக்தா.. உன் மான் காணாமல் போனதற்கு வருந்துகிறேன். உனக்கு என்ன வேண்டும்?" என்றார்.

எனது மான் காணாமல் போக யார் காரணமோ, அவர்களை என் கண் முன்னால் காட்டுங்கள். அவனுக்கு என் கையால் தண்டனை அளிக்க வேண்டும்" என ஆவேசமாகக் கூறினான்.

"பாசத்தை விட கோபம் அதிகமாக இருக்கக் கூடாது பக்தா. உன் மானைக் கேள், அல்லது பொன் பொருள் என எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன். உன் கோபத்தால் சிக்கலில் மாட்டுவாய்" என்றார்.

ஆனால் அவன் கேட்பதாக இல்லை. "என்ன ஆனாலும் சரி, அவனை என் கண்முன்னே நிறுத்துங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது உங்கள் கடமையல்லவா.." என கத்தினான்.

சிறிது நேரத் தயக்கத்துக்குப்பின், "சரி, இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீ தான் பொறுப்பு" எனக் கூறினார்.

உற்சாகமான அவன் "இது போதும்.. அவனைக் கொண்டுவாருங்கள்" என்றான்.

உடனே கடவுள் கையை நீட்ட, அங்கு நின்றிருந்தது மிகப் பெரிய சிங்கம்! அதைப் பார்த்த்து உறைந்து போன முத்து, கடவுளே காப்பாற்று என அலறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடினான்.

ஆனால் சிங்கத்திடமிருந்து தப்பிக்க முடியுமா என்ன!

இன்றைய மனிதர்கள் பலரும் இப்படித்தான். ஆத்திரத்தால் அறிவிழக்கிறார்கள். பழிவாங்கும் எண்ணம் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி விடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

ஆத்திரம் வரும் நேரத்தில் ஒரு நிமிடம் அறிவுக்கு வேலை கொடுத்தால் போதும். எந்தப் பிரச்சனையும் நெருங்காது.🦁🦁🦁🦁🦁 

அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு

அரசுப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு 4%ஆக உயர்வு

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்களில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் 1981-ஆம் ஆண்டிலிருந்தே மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பார்வைக் குறைபாடுடையோர், செவித்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை-கால் பாதிக்கப்பட்டோருக்குத் தலா 1 சதவீத பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ன் படி, மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்களில் 4 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதன்படி, ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவீத இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக தமிழக அரசுப் பணிகளிலும் உயர்த்தி அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

யார் யாருக்கு எவ்வளவு?

மாற்றுத் திறனாளிகளுக்காக அரசுப் பணிகளில் அளிக்கப்பட இருக்கும் 4 சதவீத ஒதுக்கீட்டில் பார்வைக் குறைபாடு உடையோருக்கு 1 சதவீதம், செவித் திறன் குறைபாடு உடையோருக்கு 1 சதவீதம், கை-கால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோர், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு 1 சதவீதம், புறஉலகு சிந்தனையற்றோர், அறிவு சார் குறைபாடுடையோர், மனலநம் பாதிக்கப்பட்டோருக்கு 1 சதவீதம் என ஒதுக்கீடு வழங்கப்படும்.

இந்த 4 சதவீத இடஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதியுதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும்.

Tuesday, May 30, 2017

தனியார் பள்ளிகளில் பயிலும் 25 சதவீத பெயர்ப்பட்டியல் நாளை வெளியீடு

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு

பெயர் பட்டியல் நாளை வெளியீடு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் புதன்கிழமை (மே 31) வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில், குழந்தைகளைச் சேர்க்க இணையதளம் மூலம் மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

நாளை பட்டியல்: இதில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் புதன்கிழமை (மே 31) வெளியிடப்படும்.

குலுக்கல் முறையில்..

நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கும் பள்ளிகளில், புதன்கிழமை (மே 31) அன்று குலுக்கல் முறையில் சேர்க்கைகான மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர்.

சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பள்ளி முதல்வர் முன்னிலையில் குலுக்கல் நடைபெறும்.

முதலாவதாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர்களான ஆதரவற்றவர்கள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத் தொழிலாளிகளின் பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் போன்றோரிடமிருந்து பெறப்பட்ட தகுதியான விண்ணப்பங்கள் குலுக்கல் இன்றிச் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படும்.

ஒவ்வொரு பள்ளிக்கும் நுழைவுநிலை வகுப்பின் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 இடங்கள் வீதம் காத்திருப்புப் பட்டியல் குலுக்கல் முறையில் தயார் செய்யப்படும்.

ஜூன் 5-க்குள் சேர்க்கை:

சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், அந்தந்த பள்ளியின் தகவல் பலகையில் புதன்கிழமை (மே 31) வெளியிடப்படும். இவர்களுக்கு ஜூன் 5 -ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சேர்க்கை வழங்கப்படும்.

Monday, May 29, 2017

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு அறிவிப்பு

ஜூன் 28-ல் 10ம் வகுப்பு துணைத்தேர்வு :
அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு...


10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 28-ம் முதல் ஜூலை 6-ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
துணைத்தேர்வுக்கு மே 31-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள், தேர்வு மையங்கள் மூலம் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும், தனியார் பிரவுசிங் செண்டர்கள் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது

சட்ட படிப்புக்கு விண்ணப்பம் ரெடி

தமிழகத்தில் சட்டப்படிப்புகளுக்கு ஜூன் 2-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்

தமிழகத்தில் 5 மற்றும் 3 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அரசு சட்டக்கல்லூரிகளில் ஜூன் 2-ம் தேதி முதலும், சீர்மிகு சட்டப்பள்ளியில் நாளை  முதலும் வழங்கப்படுகின்றன.

சட்டம் பயில்வதற்கான வயது உச்சவரம்பை முற்றிலும் தளர்த்தி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மற்றும் இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்படவுள்ள 3 சட்டக்கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கையை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, பி.ஏ. எல்.எல்.பி. 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு வரும் 2-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படுவதாகவும், ஜூன் மாதம் 23-ம் தேதி வரை வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, அன்றைய நாளிலே சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 ஆண்டு எல்.எல்.பி. படிப்புக்கு வரும் 7-ம் தேதி முதல், ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படுவதாகவும், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள், ஜூலை 17ம் தேதி என்றும் அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி கடன் பெற பான்கார்டு அவசியம்

கல்வி கடன் வேண்டுமா? ''பான் கார்டு'' வாங்குங்க! கல்வி கடன் பெற, பான் கார்டு அவசியம் என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிந்து, உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள், கல்வி கடனுக்காக, வங்கிகளை அணுக துவங்கியுள்ளனர். அவ்வாறு அணுகுவோருக்கு, சில அடிப்படை விஷயங்கள் தெரிவதில்லை என, வங்கி அலுவலர்கள் கூறுகின்றனர்.

முக்கியமாக, மாணவர்கள், வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். பெற்றோரின் பான் கார்டும் தேவை. பான் கார்டு இல்லாத பெற்றோர் மற்றும் மாணவர்கள், உடனடியாக அதற்கு விண்ணப்பித்தால், ஒரு மாதத்திற்குள் கிடைத்து விடும் என, ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பள்ளிகளில் மீண்டும் நீதிபோதனை வகுப்பு ஆரம்பம்

வரும் கல்வியாண்டு முதல் நீதிபோதனை வகுப்பு

அரசு பள்ளிகளில், மாணவர்களை நல்வழிப்படுத்தும் நீதிபோதனை வகுப்புகள், புதிய கல்வியாண்டு முதல் மீண்டும் தனிப்பாடவேளையாக செயல்படுத்தப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு நீதி கருத்துகளை கற்பிக்கும் வகையில், நீதிபோதனை வகுப்புகள் வாரத்திற்கு ஒரு பாடவேளையாக செயல்படுத்தப்பட்டது.

கடந்த 2011ம் ஆண்டு முதல் இவ்வகுப்புகளை நாள்தோறும் நடத்தும் வகையில், ஒவ்வொரு பாடவேளைக்கு முன்னரும் பத்து நிமிடம், இடைவேளை நேரம், இறை வணக்கக் கூட்டங்களில் நீதிபோதனை கருத்துகளை கற்பிக்கும் படி திட்டம் மாற்றப்பட்டது.

தொடர்ந்து, யோகா பயிற்சி, பாடவேளைக்கு நேரமின்மை போன்ற காரணங்களால், நீதிபோதனை வகுப்பிற்கான நேரம் குறைக்கப்பட்டு, இவ்வகுப்புகள் நடத்துவதே அரிதாகிவிட்டது. இதனால், மாணவர்களுக்கும் நீதிபோதனை வகுப்புகள் மீதான ஆர்வம் குறைந்துள்ளது.

இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கிடையே தொடர்ந்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும், மனதளவில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு ஏற்படும் தீய எண்ணங்களை களையவும் நீதி போதனை வகுப்புகளை தனி பாடவேளையாக செயல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டது.

வாரம் இருமுறை, 45 நிமிடம் கொண்ட இரு பாடவேளைகள், முழுமையாக நிதிபோதனை வகுப்புகளாக மாற்றவும், பள்ளி பாடவேளையில் அவ்வகுப்புகளை சேர்க்கவும், ஆசிரியர்கள் அவ்வகுப்புகளில் கட்டாயம் மற்ற பாடங்களை நடத்தக்கூடாது என்பன போன்ற விதிமுறைகளும் செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால், கடந்தாண்டு, இந்த நடைமுறை அறிவிப்போடு நின்றுவிட்டதால், பத்து நிமிட இடைவேளை நன்னெறி வகுப்புகள் மட்டுமே தொடர்ந்தன.பள்ளி மாணவர்களை நல்வழிபடுத்துவதில், நீதிபோதனை வகுப்புகளும் முக்கிய பங்கு வகுக்கிறது. மாணவர்களின் உளவியல் ரீதியாக சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, நடமாடும் ஆலோசனை மையத் திட்டம் உள்ளது. ஆனால், அவ்வாறு உளவியல் ரீதியாக பாதிக்கப்படாமல் மனதை ஒருமுகப்படுத்துவது இதுபோன்ற நன்னெறி வகுப்புகள்தான்.

சிறந்த கருத்துகளை, சிறப்பான முறையில், மாணவர்களுக்கு எளிமையாக கொண்டு சேர்ப்பது மட்டுமே இந்த வகுப்பின் நோக்கம்.கடந்த, நான்காண்டுகளாக இல்லாத வாய்ப்பு வரும் கல்வியாண்டு முதல் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.

வரும் கல்வியாண்டில், மாதம் ஐந்து வகுப்புகள் என நன்னெறி வகுப்புகளுக்கு ஒரு தனிப்பாட வேளை ஒதுக்க கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

அந்த வகுப்புகளில் திருக்குறளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, எந்தெந்த குறள்களை கற்பிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆசிரியர்களுக்கு அட்டவணை வழங்க, கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Sunday, May 28, 2017

உங்களின் தன்னம்பிக்கை வளர வேண்டுமா ?

உங்கள் தன்னம்பிக்கையே உங்கள் சொத்து. தன்னம்பிக்கை குறைந்தவர்களால் எதையும் சாதிக்க முடியாது.. உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள சில எளிதான் வழிகள்:

1 . உங்களிடம் நீங்களே தனிமையில் பேசுங்கள்... நீ சாதிக்க பிறந்தவன் என.

2. நேர்த்தியாக ஆடை அணியுங்கள். விலை குறைந்ததோ, அதிகமானதோ கவலை இல்லை... இருப்பதை நேர்த்தியாக அணியுங்கள்.

3 . எதிர்மறையான பயங்களை தவிர்த்து, நேர்மறையாக சிந்திக்க பழகுங்கள்.

4 . வாழ்க்கை விளையாட்டு என்பதை மனதில் நிறுத்தி, எதையும் எதிர்கொள்ளும் வலிமையை மனதிற்கு கொடுங்கள்.

5 . நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும், அமரவும் பழகுங்கள்.. தன்னம்பிக்கை தானே அதிகரிக்கும்.

6 . உள்ளம் எப்படியும் இருக்கட்டும்... முகத்தில் மட்டும் சிறு புன்னைகையுடன் இருக்க பழக்குங்கள்.

7 . சின்ன இலக்குகளை தினமும் நிர்ணயியுங்கள்.. அதை சாதித்து விட்டு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்..

8 . தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.. மூச்சை அடிக்கடி இழுத்து, நுறையீரலில் புதுக்காற்றை நிரப்பிக் கொள்ளுங்கள்.

9 . இவை எல்லாவையும் விட மிக முக்கியமாக.. உங்களுக்கு நடந்த நல்லவைகளை அடிக்கடி பட்டியலிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.. நிச்சயம் தன்னம்பிக்கை வளரும்..

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

CBSE RESULT TODAY CONFORM

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று ''ரிசல்ட்'' வெளியீடு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடந்தது. 10 ஆயிரத்து, 678 பள்ளிகளைச் சேர்ந்த, 4.60 லட்சம் மாணவியர் உட்பட, 11 லட்சம் பேர் பங்கேற்றனர்.

தேர்வில், விலங்கியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது. ஆனால், கருணை மதிப்பெண் வழங்க, மத்திய மனிதவள அமைச்சகம் தடை விதித்தது.

அதனால், கருணை மதிப்பெண் இன்றி, தேர்வு முடிவுகளை, 25ல் வெளியிட, சி.பி.எஸ்.இ., முடிவு செய்தது. ஆனால், கருணை மதிப்பெண் முறையை, திடீரென ரத்து செய்யக்கூடாது என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனால், தேர்வு முடிவு வெளியிடுவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில், வாரிய உறுப்பினர்கள் கூடி ஆலோசித்து, மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள், இன்று நண்பகல், 12:00 மணிக்கு முன் வெளியிடப்படும் என, அதிகாரப்பூர்வமாக, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது.

தேர்வு முடிவுகளை,

www.results.nic.in,

www.cbseresults.nic.in,

www.cbse.nic.in

என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

B.ed, M.ed exam tomorrow start

தமிழகத்தில் 95 தேர்வு மையங்களில் பி.எட்., எம்.எட் தேர்வுகள் நாளை தொடக்கம்

சென்னை,தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கல்வியியல் (பி.எட்.), சிறப்பு கல்வியியல் (பி.எட்.–ஸ்பெ‌ஷல்) பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் (எம்.எட்) பட்டங்களுக்கான தேர்வுகள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஜூன் 12–ந் தேதி வரை சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி உள்பட 95 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளன.

இதில் பி.எட். முதலாம் ஆண்டில் 55 ஆயிரம் மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் 52 ஆயிரம் மாணவர்களும், எம்.எட். முதலாம் ஆண்டில் 5 ஆயிரம் மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் 4 ஆயிரத்து 400 மாணவர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு நுழைவுச்சீட்டினை இணையதளம் வழியாக அந்தந்த கல்லூரியில் பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Saturday, May 27, 2017

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பவரா? அவசியம் இதை படியுங்கள்

"சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது சரிதானா என்றால், ‘இல்லை’ என்றே மருத்துவ தரப்பில் பதில் வருகிறது. இதற்கான காரணத்தை விரிவாக பார்க்கலாம்.

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது பலருக்கும் வழக்கமான பழக்கமாக இருக்கிறது. ஆனால் அது சரிதானா என்றால், ‘இல்லை’ என்றே மருத்துவ தரப்பில் பதில் வருகிறது.

நாம் உண்ணும் உணவைச் செரிப்பதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்களையும் அமிலங்களையும் சுரக்கின்றன. சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் அவை நீர்த்துப் போகும். செரிமானம் பாதிக்கும்.

எனவே, உணவு உட்கொண்ட பின் 15 அல்லது 20 நிமிடங்களுக்குப் பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதிலும், வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவதால் உணவு எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை தடுக்கிறது.

இளஞ்சூடாய் தண்ணீர் பருகுவது, புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது என்றுகூட தெரிவிக்கப்படுகிறது.

சிலருக்கு ‘ஜில்’லென்று பிரிட்ஜில் வைத்த தண்ணீர்தான் குடிக்கப் பிடிக்கும். ஆனால், குளிர்ந்த நீர் அருந்துவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும்.

சாப்பிட்டு முடித்தபின்னர் ‘ஜில்’லென்று தண்ணீர் அருந்தினால், நம் உணவில் உள்ள எண்ணெய்த் துகள்கள் கெட்டியாகிவிடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சினை ஏற்படும்.

அதோடு, நமது உடலில் சேரும் கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது."

சாப்பிட்டவுடன் இனி குறைவாக தண்ணீர் குடிக்கவும்