கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, August 31, 2017

அய்யய்யோ மாமியாரா ?

ஒருநாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம் சொன்னார் , பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும் கணவனே , ஏழு ஜென்மத்துக்கும் கணவனாக அவர்களுக்கு கிடைப்பான் , ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது .

என்ன சிக்கல் ..?? பிரம்மா வினவினார் .

பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள் , ஆனால் ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும் என்கிறார்கள், அதுதான் சிக்கல் .

இருவரையும் திருப்தி செய்ய, என்ன செய்ய வேண்டும் ..??

இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் , பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார் , அவர் பெயர் சாணக்கியர், அவரைப் பாருங்கள் , இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் .

சித்திரகுப்தர் , சாணக்கியரை சென்று பார்த்தார் . சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து பார்த்தார் , ஒன்றும் சரிவரவில்லை .

கடைசியாக , அந்த கணவன்களிடமே கேட்டு விடுவோம் என்று முடிவு செய்து , அவர்களிடம் பேசினார்கள் . கணவன்மார்களில் ஒருவர் ,ஒரு யோசனை சொன்னார் . அதைக்கேட்டு சாணக்கியர் அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிவிட்டு இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும் இருக்க முடியாது என்று கூறிவிட்டு இதை அந்த பெண்களிடமே கேட்டு விடுங்கள் என்று சொன்னார் .

இந்த தீர்வை , சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் கூறினார் . அதற்கு அந்த பெண்கள் சித்திரகுப்தனை கையெடுத்து கும்பிட்டுவிட்டு எங்களுக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் .

அப்படி என்னதான் தீர்வு .."

அது " ..?? . . . . . . . . . . . . . . . . . . . . . .

சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் , பிரம்மா நீங்கள் கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் , ஆனால் ஒரு நிபந்தனை , ஏழு ஜென்மத்திற்கும் அதே மாமியார்தான் இருப்பார் , அதற்கு உங்களுக்கு சம்மதமா என்றார் ....

Wednesday, August 30, 2017

+2 துணைத் தேர்வர்க்கு இன்று சான்றிதழ்

பிளஸ் 2 துணை தேர்வருக்கு இன்று சான்றிதழ்

பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, இன்று(ஆக.,30), அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது. இதற்கான, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், ஏற்கனவே வழங்கப்பட்டது.

இதையடுத்து, மறுமதிப்பீடு, மறுகூட்டல் மேற்கொள்ளப்பட்டது. நிரந்தர பதிவெண் பெற்ற மாணவர்கள், தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்களுக்கு, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

மற்ற மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இந்த சான்றிதழ், இன்று முதல், தேர்வு மையங்களில் வழங்கப்படும். தேர்வர்கள், தங்கள் தேர்வு மையங்களை அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, August 29, 2017

உஷார் ! அசல் ஓட்டுநர் இல்லையெனில் 3 ஆண்டு சிறை

அசல் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை

அசல் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:

வரும் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமம் வைத்திருக்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டைன அல்லது ரூ500 அபராதம் விதிக்கப்படும்.

சீருடை அணிந்த எந்த காவல் துறை அதிகாரியும் வாகன ஓட்டுநர்களின் அசல் உரிமத்தை கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் பின்பற்ற வேண்டிய அன்புக் கட்டளைகள்

பின்பற்ற_வேண்டிய_பத்து

காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.

அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்ற இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

புண்ணியநதிகள், கோமாதா, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர் ஆகியோரை குறைந்தபட்சம் ஒரு நிமிடம் நினைப்பது அவசியம்.

வாரத்தில் ஒருநாளாவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள்.

அக்கம் பக்கத்தினரையும், மற்றவர்களையும் அன்போடு நேசித்து வாழுங்கள்.

உணவு உண்ணும் முன் மிருகங்களுக்கோ, பறவைகளுக்கோ சிறிது அளித்துவிட்டு பிறகு சாப்பிடுங்கள்.

உங்களால் முடிந்த அளவுக்கு தர்மம் செய்து வாருங்கள்.

நெற்றியில் எப்போதும் திருநீறு, குங்குமம் அணிந்து கொள்ளுங்கள்.

தூங்கச் செல்லும் முன் அன்றைய நாளில் நடந்த நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து திருத்திக் கொள்ளுங்கள்.

Monday, August 28, 2017

அது என்ன மந்திரம் ?

*மனதை பக்குவ படுத்தும் மந்திரம்!...

ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது , அதாவது, "தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும்?" என்பதே அந்த சிந்தனை.

மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான். “வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை" சொல்பவருக்கு தனது நாட்டில் ஒருபகுதியை தருவதாக அறிவித்தான்.

நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள்... ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள். நமசிவாய என்றார் ஒருவர். ஓம் சக்தி என்றார் மற்றவர். உன்னையே நம்பு என்றார் இன்னொருவர். ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை . எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான். அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை.

இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான். அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து, “மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கே வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள்... அதுவரை இதனை பார்க்கவேண்டாம்” என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான்.

மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் , மன அமைதியையும் தந்தது. இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான். சில வருடங்களுக்குப்பின்... திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.

தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான். நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக்கொள்ள எண்ணினான். தப்பித்து உயிர் பிழைத்த தன் நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன்... தூரத்தில் ஒரு மலையினை கண்டான்... இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான்.

தட்டுத்தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன், இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான். அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான்.

உடனே, அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன. “மன்னா! நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னதுபோல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள்... அதுவரை இதனை பார்க்க வேண்டாம்” இப்போது அதுபோன்ற நிலைதானே அதில் என்னதான் உள்ளது பார்ப்போம்... என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான்.

மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது, அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான்... ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது . அந்த வாசகம் இதுதான்...

*"இந்த நிலை மாறும்..."*

அவ்வளவுதான், வேறொன்றும் இல்லை. முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான். தான் தற்போது உள்ள நிலை மாறும், இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்...

தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான். அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.

மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்தமானார்கள். இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன், இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான்... நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது... அரண்மனையில் மக்கள் கூட்டம்.. அரியணையில் மன்னன்... அருகில் மகாராணி, மன்னனின் குழந்தைகள், மந்திரி, பிரதானிகள்... ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது...

மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான், மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான். தான் அறிவித்திருந்தபடி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றான் மன்னன். "மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள்தான், எனக்கு ஏதும் வேண்டாம்" என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன். மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன்.

இறுதியாக மன்னன் சொன்னான், அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள்.

அந்த மனிதன், "மன்னா! இப்போது நீங்கள் வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் இருக்கிறீர்கள் என்பது உண்மைதானே “

மன்னன், “ஆமாம் அது உண்மைதான் அன்பரே...”

அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன்.

உடனே, மன்னன் தனது விரலில் இருந்த மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான். அதில் அதே மந்திர வாசகம் இருந்தது.

"இந்த நிலை மாறும்..." மன்னர் விழிக்க, அந்த மனிதன், "இதுதான் மன்னா வாழ்க்கை... இந்த நிலையும் மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள்... நான் வருகின்றேன்..." என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன்...

நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப்பார்த்து வணங்கி நின்றான் மன்னன். இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன்! ஆதனால், நாம் எந்த நிலையில் இருந்தாலும், எந்த முடிவெடுக்கும் முன்னரும் நமக்கும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்... *"இந்த நிலை மாறும்..."

* நமது எண்ணம், உணர்வுகள், சிந்தனை, சொல் மற்றும் செயல் அனைத்தும் சரியாக இருப்பின் சரியான நிலைக்கும்... தவறாக இருப்பின் தவறான நிலைக்கும் மாறும்... ஆக, மாற்றம் ஒன்றே மாறாதது... நல்ல மாற்றம் உயர்வையும், தவறான மாற்றம் தாழ்வையும் தரும்... இந்த வாழ்வியல் உண்மையை உணர்ந்து நாம்...

*நல்ல மாற்றத்தை அடைவோம்...* *நாம் நலமுடன், வளமுடன் வாழ...*

Sunday, August 27, 2017

PERIYAR university M.Ed application

பெரியார் பல்கலையில் எம்.எட்., விண்ணப்பம் வினியோகம்

பெரியார் பல்கலையில், எம்.எட்., முழுநேர படிப்புக்கு விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.

இதுகுறித்து, சேலம், பெரியார் பல்கலை பதிவவாளர் மணிவண்ணன் விடுத்துள்ள அறிக்கை:

சேலம் பெரியார் பல்கலை, கல்வியியல் துறையில், இரண்டாண்டு படிக்கக்கூடிய எம்.எட்., முழு நேர படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேவையான தகுதி, பி.ஏ., பி.எட்., பி.எஸ்.சி., பி.எட்., உடன் இளங்கலையில், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர், 45 சதவீத மதிப்பெண்கள், மற்ற விண்ணப்பதாரர்கள், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப விலை, 500 ரூபாய். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம். விண்ணப்பம் பெற, துறை தலைவர் நாச்சிமுத்துவை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அன்று உயர்ந்த மனிதர் - இன்று ?

தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை

நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.

ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார் நாட்கள் நகர்ந்தன ...

பதவி போனது .. புகழ் போனது .. சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரோ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்" மனமுடைந்த அர்னால்ட், தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார் .

இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார்

"நாம் பதவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்" "எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம், நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்"

"எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது"

"உங்கள் புகழை, உங்கள் பதவியை, உங்கள் அதிகாரத்தை, உங்கள் அறிவை ஒரு போதும் நம்பாதீர்கள்"

"இது எதுவுமே நிரந்தரம் கிடையாது"

ஆணவத்தை அழித்த சிறுமி

ஆணவத்தை அழித்த சிறுமி

உலகப் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்,... அவர் ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார்.

அப்போது அங்கு ஒரு சிறுமி பந்துடன் வந்தாள். டால்ஸ்டாய் அருகே வந்து, அவரைப் பார்த்து 'என்னோடு விளையாட வர்றீங்களா..? என்று கேட்டாள்.

அவரும் ஒப்புக் கொண்டு அந்தச் சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார்.

மாலை நெருங்கவே, அந்தச் சிறுமி டால்ஸ்டாயிடம், 'நான் போய் வருகிறேன்' என்று கூறிவிட்டுக் கிளம்பினாள்.

அதைக் கேட்ட டால்ஸ்டாய், உன் அம்மாவிடம் சொல்லு, நான் டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று' என்றார்.

அதற்கு அந்தச் சிறுமி, நீங்களும் உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று' என்றாள்.

உலகப் புகழ்பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை எண்ணி, தன் கர்வத்துக்காக அவர் வெட்கப்பட்டார்...!

ஆம்... யாரும் யாரைவிடவும் உயர்ந்தவெரென்றோ, தாழ்ந்தவரென்றோ, மதிப்புமிக்கவரென்றோ, அறிவானவரென்றோ, அழகானவரென்றோ, நிறமானவெரென்றோ, படித்தவரென்றோ நீங்கள் உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைத்துவிடாதீர்.

இப்புவிப் பந்தில் ஒவ்வொரு மனிரும் சிறப்புக்குறியவர்தான். இச்சமூகத்தால் சாதியால் ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதர்கள், இச்சமூகத்தில் பெரிதாய் மதிக்கப்படாத ஏழைகள், படிக்காத பாமரர்கள், ஆங்கிலம் தெரியா தாய்மொழி இயல்புடையவர்கள், மற்றவரால் கவரப்படாத, மற்றவரின் கண்களை வசீகரித்து சுன்டி இழுக்காத கருத்தநிற மேனியை கொண்டவர்கள், எடுப்பாய் மினுக்காய் வனப்பாய் உடலமைப்பில்லாதவர்கள், வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வேர்வை சொட்ட நிலத்தில் உழைத்து களைப்பவர்கள் (ஆண் பெண்) யாவருக்கும், உங்களைப்போலவே, சுயமரியாதை கோபம் வலி மகிழ்ச்சி பசி உறக்கம் பிரிவின் வலி சுடுசொல்லின் வலி இழிசொல்லின் வலி புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும் உண்டு.

மேற்குறிப்பிட்ட இவர்களை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை., சொல்லால் , பார்வையால், செயலால், புறக்கணிப்பால், நம்பிக்கை துரோகத்தால், ஏளனச்சிரிப்பால் .... நெட்டித்தள்ளி வதைசெய்து விடாதீர்கள். .

வாழ்க வளமுடன் !!!

Saturday, August 26, 2017

சிறப்பாசிரியர் தேர்வை கவனமுடன் எழுதுங்கள்

சிறப்பாசிரியர் தேர்வில் பணியில் உள்ளவர்களுக்கு 2 முறை மட்டுமே வாய்ப்பு : டிஆர்பி அறிவிப்பு

சிறப்பாசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தற்போது பணியில் உள்ளவர்களுக்கு 2 முறை மட்டுமே வாய்ப்பளிக்கப்படும். வெற்றி பெற்றாவிட்டால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 2014ல் அனைத்து மாநிலங்களிலும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதன் மூலம் ஓவியம், தையல், உடற்கல்வி, இசை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான ஆசிரியர்கள் பணிநியமனம் பெற்றனர். வாரம் 3 நாள் குறிப்பிட்டநேரப் பணி என்ற விதிமுறைகளின் கீழ் இவர்கள் பணிபுரிந்தனர்.

ஆரம்பத்தில் ரூ. 5 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு தற்போது ரூ.7 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர்.அவர்களை பணி நிரந்தரம் செய்யவும், வேலையில்லாத சிறப்பாசிரியர்களுக்கு அரசு வேலை வழங்கும் வகையில் கடந்த மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித்தேர்வை அறிவித்தது.

இதற்கான தேர்வு வரும் செப். 23ல் நடைபெற உள்ளது. மற்ற மாநிலங்களைப் பொறுத்தளவில் 3 முறைக்கு மேல் இத்தேர்வு நடைபெற்று விட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் முதல்முறையாக தேர்வு நடைபெற உள்ளது.சிறப்பாசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தற்போது பணியில் உள்ளவர்களுக்கு 2 முறை மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என அனைவருக்கும் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு குழந்தைகள் மன்ற ஓவிய ஆசிரியர் கூட்டமைப்பு மாநில தலைவர் நல்லகாசிராஜன் கூறுகையில், சிறப்பாசிரியர்களுக்கான போட்டித் தேர்வு மற்ற மாநிலங்களில் பலமுறை நடந்துவிட்டது.

ஆனால் இங்கு தற்போதுதான் நடக்க உள்ளது. பகுதிநேரப் பணியில் இருப்பவர்களுக்கு 2 முறை மட்டுமே வாய்ப்பளிக்கப்படும். விண்ணப்பிக்காதவர்கள், தேர்விற்கு வராதவர்களுக்கும் இது முதல்வாய்ப்பாகவே கருதப்படும். தேர்ச்சி பெறாதவர்களால் தொடர்ந்து பணிபுரிய முடியாது.

வெற்றி பெற்றால் பணி நிரந்தரம் செய்யப்படுவர். பணியில் இல்லாதவர்களைப் பொறுத்தளவில் எத்தனை முறைவேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். எனவே தேர்வர்கள் கூடுதல் கவனத்துடன் இத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

லைசென்ஸ் இனி இல்லையென்றால் புதிய வாகனம் பதிவு செய்ய இயலாது

ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை பதிவு செய்யக்கூடாது போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தின் அனைத்து போக்குவரத்து மண்டல அதிகாரிகளுக்கும் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சாலை விபத்தினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என்பது அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

2013–ல் 14 ஆயிரம் சாலை விபத்துகளில் 15,563 பேரும், 2014–ல் 14,165 விபத்துகளில் 15,190 பேரும், 2015–ல் 14,524 விபத்துகளில் 15,642 பேரும், 2016–ல் 16,092 விபத்துகளில் 17,218 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டில் ஜூலை வரை 9,231 விபத்துகளில் 9,881 பேர் மரணமடைந்துள்ளனர். ஓட்டுனரின் தவறு, பயணிகளின் தவறு, பாதசாரிகளின் தவறு, எந்திர கோளாறு, மோசமான சாலை, மோசமான வானிலை போன்ற பல காரணங்கள் விபத்துகளுக்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் ஓட்டுனரின் தவறுதான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் பாதுகாப்புக்காக மத்திய மோட்டார் வாகன விதிகள், மாநில விதிகள் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த விதிகள் கொண்டுவரப்பட்டன. அவையெல்லாம் ஓட்டுனர்களின் செயல்பாட்டை நிர்வகிப்பதற்காகவும், போக்குவரத்து குற்றங்களை தடுப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டன.

வாகனத்தை ஒருவருக்கு வழங்கும்போது விற்பனையாளர்கள் கண்டிப்பாக இந்த விதிகளை பின்பற்ற வேண்டும். வாகனத்தை வாங்கும் ஒருவரிடம் முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால், அவரது வாகனத்தை பதிவு அதிகாரியோ அல்லது உதவிப் பதிவு அதிகாரியோ பதிவு செய்யக்கூடாது.

இந்த விதிகளைப் பற்றி அவரவர் அதிகார எல்லைக்கு உட்பட்ட டீலர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் வாகன பதிவு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.