`மே 3 முதல் இன்ஜினீயரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கலாம்'' - உயர்கல்வித்துறை அறிவிப்பு!
மே 3-ம் தேதி முதல் பொறியியல் படிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிக்கவுள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
``பொறியியல் கலந்தாய்வுக்கு மே 3 முதல் அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வரும் 29-ம் தேதி இணையதளம் மூலம் விண்ணப்பம் கோருவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
மே 30-ம் தேதி விண்ணப்பங்களைப் பதிவு செய்யக் கடைசி நாள் ஆகும்.
இதையடுத்து ஜூன் முதல் வாரத்தில் விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கப்படும்.
No comments:
Post a Comment