கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, August 1, 2016

கடவுளையே வியக்க வைத்த பாட்டி

மூதாட்டிக்கு அளித்த ஒரே வரம்

 ஒரு ஊரில் தன் வாழ்நாள் முழுவதும் பெருமாளுக்கு சேவை செய்த மூதாட்டி ஒருத்தியின் கனவில் பெருமாள் தோன்றினார்.

பாட்டி உன் இளமை முதலே நீ என் மீது கொண்ட பக்தியை மெச்சினேன். விரும்பிய வரம் தருகிறேன், கேள்! என்றார்.

உடல் தளர்ந்திருந்தாலும் பாட்டிக்கு மனம் இளமையாகவே இருந்தது.  மூதாட்டி, ஏழாவது மாடியில் நின்று கொண்டு என் எள்ளுப்பேரன் தங்கக் கிண்ணியில் பால் சாதம் சாப்பிடுவதை என் கண்களால் காண வேண்டும், என்றாள்.

பெருமாளும் பலே பாட்டி, பலே என்று மகிழ்ந்து வரம் கொடுத்து விட்டார். காரணம் பாட்டி, தன்னுடைய எல்லா விதமான ஆசைகளையும் ஒரேயடியாகச் சொல்லி விட்டது தான்.

 நீ எள்ளுப்பேரன் பிறக்கும் வரை பூமியில் நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புகிறாய். அதுவும் மாடியில் படியேறிச் சென்று பார்க்கும் விதத்தில் உடலில் பலம் வேண்டும் என்கிறாய்.

ஏழுமாடி வீட்டுக்குச் சொந்தக்காரியாக வாழும் செல்வ வளமும் வேண்டும் என விருப்புகிறாய். எள்ளுப்பேரன் தங்கக் கிண்ணியில் பால்சாதம் சாப்பிடும் அளவுக்கு வீட்டில் சுபிட்சமும் நிலவ வேண்டும் என ஆசைப்படுகிறாய்.

 கீழ் தளத்தில் நடப்பதை, ஏழாவது தளத்தில் நின்று பார்க்கும் விதத்தில் கண்பார்வை தெளிவாக இருக்க வேண்டும் என விரும்புகிறாய்! இத்தனையையும் ஒரே வரத்தில் கேட்டு விட்டாயே! என்று பாராட்டி வரத்தையும் கொடுத்து விட்டார்.

குறைந்த வார்த்தைகளில் தெளிவாக பேசினாலும், எழுதினாலும் வெற்றி மேல் வெற்றி தான்.

படித்ததில் பிடித்தது

No comments:

Post a Comment