தமிழில் வெளிவந்த படங்களிலே தற்போது வெளிவந்த ஜோக்கர் திரைப்படம் சமூக அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது.
சாட்டை, விசாரணை படங்களை போல ஜோக்கரும் தமிழின் சிறந்த படமாகும்.
இயக்குநர் ராஜீமுருகன் மக்களை விழிக்க வைக்க செய்த சிறப்பான முயற்சி.
சமூதாயத்தை சீரழிக்கும் படங்களிலே சிந்திக்க வைத்த திரைப்படம்.
பலகோடி வாங்கும் நடிகர்கள் நடித்திருந்தால் கூட படம் வெற்றி பெற்றிருக்குமா என்பது ஐயமே.
புதுமுக நடிகர்களின் நடிப்புக்கு பாராட்ட வார்த்தை இல்லை.
வசனங்களே படத்தின் தனிச்சிறப்பு.
சமூகத்திற்காக பாடுபடும் போராளிகளை நாம் ஜோக்கர்களாகவே எண்ணுவதை படம் பார்க்கும் போது நம்மை தலைகுனிய வைக்கிறது.
சிந்திக்க வைத்த ஜோக்கருக்கு ஓர் சல்யூட்.
முதலில் நம்மை மாற்றுவோம்.பின் சமூகத்தை மாற்றுவோம்
No comments:
Post a Comment