தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு:
அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதி 2 கட்டங்களாக நடைபெறுகிறது சென்னை,மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோபர் மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் கமிஷனர் சீத்தாராமன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனுத்தாக்கல் - செப்டம்பர் 26 ( நாளை ) முதல் தொடங்குகிறது.
வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசிநாள் - அக்டோபர் 3-ம் தேதி ஆகும்.
வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு - அக்டோபர் 4-ம் தேதி.
வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் - அக்டோபர் 6 தேதி.
தமிழக உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு -
அக்டோபர் 17 (10 மாநகராட்சிகள்),
19-ம் தேதி சென்னை, மற்றும் திண்டுக்கல்,(2 மாநகராட்சிகள் நடைபெறுகிறது.
உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை - அக்டோபர் 21 நடைபெறுகிறது.
காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
வெற்றி பெறும் உறுப்பினர்கள் அக்டோபர் 26ம் தேதி பதவியேற்கவுள்ளனர்.
நேரடி தேர்தலுக்கு பின்பு 13,362 பதவிகளுக்கான மறைமுகத்தேர்தல் நடைபெறவுள்ளது.
சென்னையில்19ம் தேதி உள்ளாட்சித்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆறரை லட்சம் பேர் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 91,098 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. நேரடி தேர்தல் முடிவுற்று, மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும். தேர்தல் பணிகளை பார்வையிட 37 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
நேரடி தேர்தலுக்கு பின் 13,362 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலில் 5.8 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
No comments:
Post a Comment