பற்ற வைத்தால் வெடித்துக் கரியாகும்,
பட்டாசுக்கு செலவிடும் பணத்தை,
பசியுற்ற மக்களுக்கு பிரித்தளித்து ஏழையின் சிரிப்பில் காண்பதே ஏற்றமிகு தீபாவளி !
பலவித பலகாரங்கள் பக்குவமாய் செய்து,
சுற்றம்நட்புடன் பகிர்வதற்கு பதிலாக..
சிலவறியோர் குடிசை கதவுதட்டி,
இன்முகத்துடன் தருவதே தித்திக்கும் தீபாவளி !
சொந்தம் ஒதுக்க,
அனாதைஇல்லம் அரவணைக்க,
அன்பிற்கேங்கும் ஆதரவற்ற முதியோரின்..
நொந்த உள்ளம் ஆறுதலுற பேசி..
பொழுதுபோக்கும் காலமே பொன்னான தீபாவளி !
வாழ்த்துக்களை வார்த்தைகளால் பரிமாறி வாழ்க்கையில் மகிழ்ச்சி மலர வருகின்ற தீபஒளி திருநாளில் தீயன கழித்து நல்லன கூட்டுவதே உண்மையில் தீபாவளி .....!!!
இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி...
அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment