தினம் : தியாகிகள் தினம்
நாள் : 30-January
#தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மறைந்த நாள் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது....
*இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராது பாடுபட்டு, இன்னுயிரை ஈந்த, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும்......
*அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் மறைந்த நாள் ( ஜன.30) தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது......
*சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இதன் நோக்கம்......
*நாடு சுதந்திரம் பெற்றதில், மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது.....
*1948 ஜன.30ம் தேதி, காந்தியடிகள், நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்......
*இந்தியாவின் துக்க நாளாக இது அமைந்தது.....
*அவரது தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தும் வகையில், இன்று இந்தியா முழுவதும் காலை 11 மணிக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது....
*உலகம் முழுவதிலும் பெரிய தலைவர்கள் கொல்லப்பட்ட வரலாறு உண்டு....
*இந்த தியாகிகள் நாளில் நாட்டுக்கு உழைத்த, அவர்களின் கருத்துக்களையும், கொள்கைகளையும் நினைவுகூர்ந்து, தியாகிகளின் கனவுகள் நனவாகிட அனைவரும் உழைத்திடுவோம்....
No comments:
Post a Comment