கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Monday, February 20, 2017

வங்கிகளில் இனி வாரம் ரூ. 50,000 எடுக்கலாம்

இன்று முதல் ரூ.50,000 எடுக்கலாம்

வங்கி சேமிப்பு கணக்குகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை சமீபத்தில் ரிசர்வ் வங்கி மேலும் தளர்த்தியது. வாரத்திற்கு ரூ.50,000 வரை எடுக்கலாம் என அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பிப்ரவரி 8 ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிப்ரவரி 20-ம் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு பணம் எடுப்பதற்கான அளவு ரூ.50,000 ஆக உயர்த்தப்படும்.

மார்ச் 13 ம் தேதி முதல் சேமிப்பு கணக்கில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முற்றிலுமாக நீக்கப்படும் என கூறி இருந்தது.
இதனையடுத்து இன்று முதல் வங்கிகளில் வாரத்திற்கு ரூ.50,000 வரை பணம் எடுக்கலாம்.

No comments:

Post a Comment