பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்கள் எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர், வெள்ளிக்கிழமை (மே 19) முதல் திங்கள்கிழமை (மே 22) மாலை 5.45 மணி வரை தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டல் கட்டணம்:
பகுதி 1-மொழிப் பாடம் -ரூ.305
பகுதி 2--மொழி (ஆங்கிலம்)ரூ.305
பகுதி 3 -கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ரூ.205
பகுதி 4 --விருப்ப மொழிப் பாடம் ரூ.205
செலுத்தும் முறை:
மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.
சிறப்பு துணைப் பொதுத்தேர்வு எப்போது?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதோருக்கும் ஜூன் மாத இறுதியில் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு நடத்தப்படவுள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது."
No comments:
Post a Comment