அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் மதுரை
இந்தாண்டு முதல் ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்க நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி ஓய்வூதிய அனுமதி எண், பெயர், முகவரி, ஆதார் எண் உட்பட 12 வகையான விபரங்களை உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கருவூலங்களில் வழங்கவும் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தில் 42,248 ஓய்வூதியர்கள் உள்ளனர்.மாவட்ட கருவூலத்தில் ஏராளமான ஓய்வூதியர்கள் விண்ணப்பித்தனர்.
கூடுதல் மாவட்ட கருவூல அலுவலர் சவுந்திரராஜன் கூறுகையில், இந்த விண்ணப்பங்கள் மாநில கருவூலம் மற்றும் கணக்குத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அங்கு சரிபார்ப்புக்கு பிறகு, இரண்டு மாதங்களில் அடையாள அட்டை வழங்கப்படும், என்றார்
No comments:
Post a Comment