10 இடங்களில் பெட்ரோல் பங்க் சென்னை, சேலம் உள்பட தமிழகத்தில் 10 இடங்களில் "அம்மா' பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும்
சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் இரா.காமராஜ் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிவிப்பு:
பெட்ரோல் நிலையம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 33 மண்டலங்களில் மொத்தம் 221 சொந்தக் கிடங்கு வளாகங்கள் அமைந்துள்ளன. அவற்றில் பிரதான
சாலைகளின் அருகில் அமைந்துள்ள 10 இடங்களான சேலம் எடப்பாடி, சென்னை நந்தனம், தஞ்சாவூர் இரும்புத்தலை, திருச்சி மணப்பாறை, திருவாரூர் சுந்தரக்கோட்டை, வேலூர் வாணியம்பாடி, நாகப்பட்டினம் கோயில்பத்து, மதுரை கப்பலூர், விழுப்புரம் வானூர், கரூர் கிருஷ்ணராயபுரம் ஆகிய இடங்களில் இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து "அம்மா' பெட்ரோல் நிலையம் அமைக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment