மேல்நிலைப்பள்ளிகளில் வைஃபை வசதி: சட்ட சபையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வேடச்சந்தூர் தொகுதி எம்எல்ஏ பரமசிவம் எழுந்து துணைக் கேள்வி ஒன்றை கேட்டார். அப்போது அவர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள நூலகத்தில் வைஃபை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்,
‘மேல்நிலைப்பள்ளிகளில் வைஃபை வசதி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நூலகத்தில் மாணவர்கள் இந்த வைபை வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றார்.
No comments:
Post a Comment