"நாளை முதல் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க-திருத்த சிறப்பு முகாம்
நாளை முதல் 31-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க மற்றும் திருத்த சிறப்பு முகாம், காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா தகவல்.
காஞ்சீபுரம்: காஞ்சீபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியலை செம்மைபடுத்துதல் பணி குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடந்தது.
அப்போது கலெக்டர் பா.பொன்னையா கூறியதா வது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 18 முதல் 21 வயது கொண்ட புதிய இளம் வாக்காளர்களுக்கென வாக்காளர் பட்டியலில் சிறப்பு சேர்க்கை பணி மற்றும் திருத்த பணி நாளை முதல் ஜூலை 31-ந்தேதி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உரிய படிவங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஜூலை 9-ந் தேதி மற்றும் 23-ந்தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்த நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட்ட படிவங்களை பெறுவார்கள்.
அப்போது இறந்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட இறப்பு பதிவு விவரங்கள்படி நீக்கப்படும்.
இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு தேர்தல் பிரிவு தொலைபேசி எண்.044-27238445 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சவுரிராஜன், சப்-கலெக் டர்கள் அருண்தம்புராஜ், வி.பி.ஜெயசீலன், கில்லி சந்திரசேகர், தாம்பரம் கோட்டாட்சியர் எம்.ரவிச் சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜி.விமலா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்."
No comments:
Post a Comment