இன்று சூன் 21 சர்வதேச யோகா தினம்....!!!
'யோகா‘ என்பது இந்தியாவின் பழங்கால மரபு நமக்கு வழங்கிய ஒரு அன்பளிப்பு, இன்று அது உலகுக்கே உரிய பொக்கிஷமாகஉள்ளது.
*ஐக்கிய நாடுகளின் பொது அவை 2015 ஜூன் 21-ஆம் தேதியை உலக யோகா தினமாக அறிவித்தது நமக்கெல்லாம் பெருமைமிக்க தருணம்.
*உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் யோகாவின் நன்மைகள் போய் சேர வேண்டும் என்றநோக்கத்தில் உலகம் முழுதும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
*யோகா என்பது 5000 வருடப் பழமை வாய்ந்த உடல், மனம் மற்றும்ஆன்மீகப் பயிற்சியாகக் கருதப்படுகிறது.
*கி.மு. ஐந்தாம்நூற்றாண்டு காலத்தில் இந்தியாவில் வாழ்ந்து வந்தவர் என்று கருதப்படும் பதஞ்சலி எனும் முனிவரே யோகாவின் தந்தை என்றுகருதப்படுகிறார்.
*அவர் ‘யோக சூத்திரங்கள்‘ எனும் நூலை எழுதினார். அது யோகம், விழிப்புணர்வு மற்றும் மனித நிலைபோன்றவற்றைப் பற்றிய சூத்திரங்களைக் கொண்டது.
‘யோகா’ எனும் சொல் ‘யுஜ்’ எனும் சம்ஸ்கிருத சொல்லிலிருந்து பிறந்துள்ளது, ‘யுஜ்’ என்றால் ஒருங்கிணைத்தல் என்று பொருள்.
*ஆன்மீகச் சூழலில் ‘ஒருங்கிணைத்தல்’ என்பது தனி மனித விழிப்புணர்வை (ஜீவாத்மாவை) பிரபஞ்ச விழிப்புணர்வுடன் (பரமாத்மாவுடன்) ஐக்கியமாகச் செய்வதைக் குறிக்கிறது.
*நடைமுறைத் தத்துவத்தில் கூறினால், யோகா என்பது ‘சமநிலை’ என்பதைக் குறிக்கும்.
*அதாவது ஆசனப் பயிற்சிகள், பிராணயாமம் எனும் மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் ஆகியவற்றின் மூலம் உடல், மனம் மற்றும் உணர்வுகளின் சமநிலையைப் பராமரித்தல் என்று பொருள்.
*பெரும்பாலும் யோகா என்பது உடல் சார்ந்த பயிற்சி அல்லது சுவாசப் பயிற்சி (அக்ரோபாட்டிக்ஸ்) அல்லது அமானுஷ்ய சக்திகளைப் பெறும் முறை என்று கருதப்படுகிறது.
*அது உண்மை இல்லை. யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை, ‘உடல்நலத்திற்கும் நல்வாழ்விற்குமான ஒரு புனிதமான அணுகுமுறை..
*நம்மை நாமே அறிந்துகொண்டு நமது இருப்பில் நிலை கொண்டு இருக்க உதவும் ஒரு மார்க்கம்.
*பல்வேறு துறைகளிலும் யோகா பயன்படுத்தப்பட்டு இப்போதுமிகவும் பிரபலமாகியுள்ளது. #கல்வி... *யோகா மன அமைதிக்கு பெரிதும் உதவுவதும், மனஒருமைப்பாடு, நினைவாற்றல், நம்பிக்கை ஆகியவற்றை அதிகப்படுத்தும் என்பதும்,
*குழந்தைகளுக்குஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
*இதனால், பல பள்ளிகளும் கல்விநிறுவனங்களும் இப்போது அவர்களின் பாடத்திட்டத்தில்யோகாவைச் சேர்த்துள்ளன.
#உடல்நலம்: *யோகா என்பது உடல் மற்றும் மனதிற்கான மருந்து என்பது நம்பிக்கையாகவும் உள்ளது, நிரூபிக்கப்பட்ட உண்மையுமாகும்.
*பல மருத்துவமனைகள் யோகாவை தமது சிகிச்சைகளில் ஒரு பகுதியாகப் பயன்படுத்துகின்றன.
*மருத்துவர்களும் நோயாளிகளை யோகா செய்யப்பரிந்துரைகின்றனர்.
மன அழுத்தத்தை எதிர்கொள்ள:
*இது பரபரப்பும் கவலையும் மிகுந்த காலமாக உள்ளது. இவை மனிதர்களின்வாழ்க்கைத் தரத்தை வெகுவாகப் பாதிக்கிறது.
*எல்லோரும் இவற்றிலிருந்து விடுபட என்ன வழி என்று தேடிக்கொண்டுஇருக்கிறார்கள். யோகா இவர்களுக்கு நல்ல ஆறுதலாக உள்ளது.
ஒரு மாற்று மருந்தாக:
*இன்றைய உலகம் பெரிதும் பிரிவு, போட்டி நிறைந்தது, எல்லோரும் பணத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் நிலை நிலவுகிறது.
*யோகா இந்தபிரச்சனைகளுக்கு மாற்று மருந்தாக உள்ளது. எல்லோரும் ஒன்று, என்ற தத்துவத்தை யோகா உணரச் செய்கிறது, இதனால் நாம்ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த முடியும்.
*யோகாவில் பல்வேறு நன்மைகள் இருப்பதால், வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே அது கடல் கடந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளது.
*ஒரே ஒரு நாள் யோகா செய்வது வாழ்நாள் முழுதும் அதைத் தொடர நமக்கு ஊக்கம் அளிக்கலாம், அதே போல் வாழ்நாள் முழுதும் பயிற்சி செய்வது வாழ்வில் நமது இருப்பில் நிலைகொண்டு இருப்பதற்கும் வாழ்க்கை சீராகவும் அமைதியாகவும் இருக்கவும் உதவுகிறது.
*உலகில் உள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் யோகாவை ஏன் நாம் செய்யக்கூடாது.
No comments:
Post a Comment