கணவனுக்கு உள்ள சிறப்புகள்
* கணவன் என்றால் கட்டிக்காப்பவன் என்றும் கொள்ளலாம்
*பணிக்குச் சென்று மனைவி, குழந்தை, குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் சுமக்கும் சுமைதாங்கி்
* பணிசெய்யும் இடத்திலும் வேலைச் சுமை, வீட்டில் மனைவி, குழந்தை, பெற்றோர் ஆகிய அனைவரின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய கடமைச் சுமை.
* ஆண் என்பவன் ஆள்பவன்தான் என்றாலும் அலுவலகத்தில் பணியாள்தான். வீட்டிலும் பணியாள்தான்.
* மனைவியரே கொஞ்சம் கை கொடுங்கள். உயிருள்ளவரை உங்களை சுமந்து செல்லும் அந்த வாகனத்தை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள்
* மனைவியரே, அவனுடைய சுமைகளை சற்று நேரம் இறக்கிவைத்து இளைப்பாறும் இனிய வார்தைகளின் நிழலைத் தாருங்கள்.
* மனைவிக்கு நலமில்லையென்றாலும் குழந்தைக்கு நலமில்லையென்றாலும் நேரம் காலம் பார்க்காமல், சோர்வை பாராமல் மருத்துவரிடம் சுமந்து செல்லும் கணவனை புரிந்து கொள்ளுங்கள்
* உங்கள் மகளையும் மகனையும் கவனிப்பது போல் உங்கள் கணவனையும் கவனித்து கொள்ளுங்கள்
* உடல் மனம் இரண்டையும் மென்மை படுத்துங்கள்
* பணிமுடிந்து களைத்துபோனாலும் வரும் வழியில், பால் வேண்டுமா, காய் வேண்டுமா, வேறு ஏதேனும் வேண்டுமா என்று பரிவோடு கேட்கின்ற கணவனை பாராட்டுங்கள்.
* ஓய்வுபெறும் நாள்வரை அனைவருக்காகவும் உழைத்து, ஓய்வு பெற்றபின்னும் வீட்டுப்பணியை ஓய்வின்றி செய்கின்ற கணவனுக்கு தினமும் உங்கள் மடியில் சிறிது நேரம் ஓய்வு கொடுங்கள்.
* அவன் குடும்பத்திற்காக கரைந்துபோகின்ற ஒரு மெழுகுவர்த்தி. வாழ்க்கை முழுதும் கூடவே வருகின்ற ஒரு சம்பளமில்லா பாதுகாவலன்
* கடவுள் உன்னுடன் இருக்கமுடியாது என்பதற்காக அனுப்பிவைத்த காவலன்தான் கணவன்.
* அவன் கண்களில் சோர்வு வராமல் பார்த்து கொள்ளுங்கள். மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். கணவன் கலங்கும் நேரம் வந்துவிட்டால் அங்கே செல்வம் தங்காது. புரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment