கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Tuesday, July 25, 2017

எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் வாங்கலாம் வாங்க

எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் நாளை முதல்                 (25.07.2017 )வினியோகம். பெயரில் திருத்தம் செய்ய 4-ந் தேதி கடைசி நாள்

எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் நாளை முதல் (25.07.2017 )வினியோகம் பெயரில் திருத்தம் செய்ய 4-ந் தேதி கடைசி நாள் | எஸ்.எஸ்.எல்.சி. மதிப் பெண் சான்றிதழ் நாளை முதல் பள்ளிக்கூடங்களில் வினியோகிக்கப்படும்.

பெயரில் ஏதேனும் தவறு இருந்தால் திருத்தம் மேற்கொள்வதற்காக விண்ணப்பிக்க 4-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இது குறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மார்ச் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை எழுதிய மாணவ- மாணவிகளுக்கு நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்படும்.

தனித்தேர்வர்கள் தமது மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்களின் பெயர் முதன் முறையாக தமிழில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

பெயரில் ஏதேனும் தவறு இருந்தால் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று, பெயரில் திருத்தம் கோரும் கோரிக்கை கடிதத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் நாளை முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதிக்குள் அளிக்கலாம்.

திருத்தங்கள் கோரும் மாணவ-மாணவிகளிடம் இருந்து விண்ணப்பத்தை பெறவும், திருத்தங்களை இணையதளம் வழியாக அரசுத்தேர்வு துறைக்கு அனுப்பவும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பெயரில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழ்களை அடுத்த மாதம் 21-ந் தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

புதிய மதிப்பெண் சான்றிதழை பெறும்போது ஏற்கனவே பெற்ற பழைய அசல் மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment