"ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியீடு
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன.
ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-1, தாள்-2) கடந்த ஏப்ரல் மாதம் 29, 30-ம் தேதிகளில் நடந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுகளை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் எழுதினர்.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று இரவு 10.30 மணி அளவில் வெளி யிடப்பட்டன.
ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வு பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப் பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்."
No comments:
Post a Comment