கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Thursday, September 21, 2017

சீன அறிஞர் சொன்ன சில தத்துவங்கள்

*அற்புதமான வாழ்க்கை போதனை.....*

*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*

*சீன அறிஞர் எழுதியது,அது தமிழாக்கத்தில்.......!!!*

*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*

*தேவைக்கு செலவிடு........*

*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*

*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்......*

*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*

*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*

*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*

*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*

*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....*

*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*

*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......*

*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*

*உன் குழந்தைகளை பேணு......* அவர்களிடம் அன்பாய் இரு.......

*அவ்வப்போது பரிசுகள் அளி......*

*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*

*அடிமையாகவும் ஆகாதே.........*

*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க*

*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!*

*அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*

*உன் சொத்தை தான் அனுபவிக்க,நீ சீக்கிரம் சாக வேண்டுமென,வேண்டிக் கொள்ளலாம்பொறுத்து கொள்.*

*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,கடமை ,அன்பை அறியார்*

*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*

*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,* *ஆனால்......*

*நிலைமையை அறிந்து* *அளவோடு கொடு* *எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்* *கை ஏந்தாதே,*

*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி* *வைத்திராதே* *நீ* *எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து* *காத்திருப்பர்.* *எனவே கொடுப்பதை கொடுத்து விடு,* *தரவேண்டியதை பிறகு கொடு.*

*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,* *மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*

*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......* *பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*

*நண்பர்களிடம் அளவளாவு.* *நல்ல உணவு உண்டு.....* *நடை பயிற்சி செய்து.....* *உடல் நலம் பேணி......* *இறை பக்தி கொண்டு......*

*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......*

*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!* *வாழ்வை கண்டு களி...!!*

*ரசனையோடு வாழ்.....!!* *வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*

*சிறந்த தகவலாகத் தோன்றியதால் பகிரப் படுகிறது.*

No comments:

Post a Comment