*என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*
✳பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள்.
✳உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
✳நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக் கிளறாதீர்கள்.
✳உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள்.
✳விவரங்கள் சொல்லுங்கள். வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.
✳தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள்.
✳விவாதம் செய்யுங்கள். விவகாரம் செய்யாதீர்கள்.
✳விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள்.
✳சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.
✳செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள்.
✳எதிர் தரப்பும் பேசட்டும். என்னவென்று கேளுங்கள். எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.
✳நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள்.
✳தானாய்த்தான் முடியுமென்றால், வேறு வேலை பாருங்கள்.
*யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்....
* வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது...
உப்பைக் குறையுங்கள் என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள்.
அதனால் *வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டிய உப்புகள் சில:-
* கணவன்கள் - *படபடப்பு*
மனைவிகள் - *நச்சரிப்பு*
டீன் ஏஜ்க்கள் - *பரபரப்பு*
மாணவர்கள் - *ஏய்ப்பு*
மாமியார்கள் - *சிடுசிடுப்பு*
மருமகள்கள் - *கடுகடுப்பு*
வக்கீல்கள் - *ஒத்திவைப்பு*
டாக்டர்கள் - *புறக்கணிப்பு*
அரசியல்வாதிகள் - *ஆர்ப்பரிப்பு*
வயதானவர்கள் - *தொணதொணப்பு*
ஆனால், யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு *சிரிப்பு.*
இது உடம்புக்கு *மிகச்சிறப்பு...*
No comments:
Post a Comment