முன்னுரை
எவ்வளவு தான் அறிவியல் முன்னேற்றம் வந்தாலும் கூட இயற்கை செல்வங்களின் உறுதுணை மிக அவசியமானது. இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டே மனித வாழ்க்கை நடக்கிறது. அதில் மரங்களின் பயன்கள் மிக அதிகம். மரங்கள் என்பது கடவுள் நமக்களித்த அரிய படைப்பாகும். மேலும் மரங்களின் வளர்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாக்கிறது.
மரங்களினால் மனிதயினம் எண்ணற்ற பயன்களை பெறுகின்றன. மரங்கள் கார்பன் டை ஆக்சைடு எடுத்து கொண்டு ஆம் உயிர் வாழ தேவையான ஆக்சிசனை நமக்கு தருகிறது. மேலும் காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை நமக்குத் தருகிறது. வீடு கட்டுவதற்கும் பலவகையான மரச்சாமான்கள் பல உபயோகமான மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன. மரங்கள் பறவைகள் மிருகங்கள் அங்கு வர்க்கே தங்குவதற்கு இருப்பிடமாய் விளங்குகிறது. வீட்டு உபயோகத்திற்கு அடுப்பின் விறகாக பயன்படுகிறது. மேலும் நிலத்தின் தன்மையை மாற்றாமல் அப்படியே வைத்து நிலத்தடி நீரை தூய்மையாக தருகிறது.
மரங்களின் இலை வேர் தண்டு முட்டில் பூ காய் கனி இவை எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் சமுதாயத்தில் மிகவும் பயன்படுகின்றன. மழை செய்வதுக்கு மரங்கள் மிகவும் உதவியாக உள்ளது.
எல்லா வகையிலும் பயனைத் தரும் மரங்களை இன்றைய நாகரீக உலகமானது தமது வசதிக்காக கட்டிடங்களை கட்டுவதற்கும் கிடைக்கும் மரங்களை அதிக அளவு அழித்து வருகிறது. மரங்களை அதிகமாக அழிப்பதனால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் இருக்கும் மரங்களை இனியாவது பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். மழையை தருகின்ற மரங்கள் இயற்கை பொக்கிஷம் என்பதை நினைவில் கொள்வோம்.
முடிவுரை
ஒரு நாடு வளமும் நலமும் பெற்று உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டுமெனில் அதற்கு மழை மிக முக்கியம். பசுமைப் புரட்சி ஏற்பட மழைதான் உதவி செய்கிறது. எனவே மரம் வளர்ப்போ ஒருவரின் உடமை என்றே கூறலாம். பலவற்றிலும் மனித சமுதாயத்திற்கு பயன்படும் மரங்கள் நட்டு வளர்ப்போம். இயற்கையை காப்போம்.
Supper
ReplyDeleteSupert!! மரங்களின் வகைகள் மற்றும் பயன்கள் | Marangalin Payangal
ReplyDelete