கோடைகாலங்களில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது
திருப்பூரில் நேற்று அதிமுக சார்பில் நடமாடும் மருத்துவ சேவையை துவக்கி வைத்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் கோடை விடுமுறையானது அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். தனியார் பள்ளிகளில் கோடைகாலங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
எனவே மாணவர்களும் பெற்றோர்களும் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் நாள் முதல் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment