கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, July 30, 2016

மகிழ்ச்சி குருவும் சீடனும்

குருவும், சீடனும்  குருவே!

என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்றான், சீடன்,
உடனே குரு அவனை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பட்டாம் பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்ததை, இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா! என்று குரு அவனிடம் சொன்னார்.

 அவன் பட்டாம் பூச்சியைத் துரத்திக் கொண்டு ஓடினான். ஆனால், அவனால் பிடிக்க முடியவில்லை.

பரவாயில்லை வா நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம் என்று குரு, அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். இருவரும் அங்கு அமைதியாக நின்று, தோட்டத்தின் அழகைக் கண்குளிரப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.  

சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. சற்று நேரத்திற்கு முன்பு அவன் பிடிக்கத் சென்ற பட்டாம்பூச்சி, இப்போது அவன் கைகளிலே வந்து அமர்ந்தது.

அப்போது குரு சிரித்தபடி அவனிடம் சொன்னார். இதுதான் வாழ்க்கை! மகிழ்ச்சியைத் தேடி ஓடுவதை விட, நாம் வாழ்க்கையை அமைதியாக ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும் என்றார்.

No comments:

Post a Comment