மொக்கைகள்
*டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.
* என்னதான் உயர உயரப் பறந்தாலும் கொசுவை பறவை லிஸ்டில் சேர்க்கமுடியாது.
* இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம்.ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
* இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.
* கோழிக்கு கோடிக் கணக்குல தீனி வாங்கி போட்டாலும், அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...
* வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... ஒண்ணுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்.... ஒண்ணுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.
* ஒரு சிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை அடிச்சா அது கொலை.
* ஹே..ஹேய்..ஹேய்.. அழுறத நிறுத்து.. கண்ண தொட..
சிரி.. இப்ப எப்படி இருக்கு மூஞ்சி..
No comments:
Post a Comment