பி.எட். படிப்புக்கு ஜூன் 21-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேர, வரும் 21-ஆம் தேதி முதல் ஜூன் 30 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்திருக்கிறது.
விண்ணப்பம் கிடைக்குமிடங்கள்
திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்,
சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்,
குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி,
ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி,
புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி,
கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி,
வேலூர் காந்திநகரில் அமைந்துள்ள அரசு கல்வியியல் கல்லூரி,
திண்டுக்கல் காந்தி கிராமில் அமைந்துள்ள லட்சுமி கல்வியியல் கல்லுரி,
சேலம் சாரதா கல்வியியல் கல்லூரி,
மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி,
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி,
பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி,
திருவட்டாறு என்விகேஎஸ்டி கல்வியியல் கல்லூரி என்று 13 இடங்களில் மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
காலை 10 மணி முதல் 3 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினப் பிரிவைச் சார்ந்தவர்களுக்கு விண்ணப்பம் கட்டணம் 250 ரூபாய். பிற பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 500 ரூபாய். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவைச் சார்ந்தவர்கள் தங்களுடைய சாதி சான்றிதழின் நகலில் சுய சான்றொப்பமிட்டுச் சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் செயலர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600005 என்ற முகவரிக்கு ஜூலை 3-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்வியியல் கல்லூரிகளில் இரண்டு ஆண்டு பி.எட். படிப்பில் சேர ஒற்றைச்சாளர முறையில் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment