"9,10,11-ம் வகுப்பறைகளுக்கு கணினிமயமாக்க திட்டம் - செங்கோட்டையன்
ரூ.362 கோடியில் 9,10,11-ம் வகுப்பு வகுப்பறைகளை கணினிமயமாக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.
3,000 பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பு அமைக்க ரூ.60 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது.
1.20 லட்சம் மாணவர்களை பாதுகாக்கும் திட்டம் ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
நீட் உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ள 54,000 கேள்வி பதில்கள் கொண்ட சிடி தயாரிக்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்."
No comments:
Post a Comment