கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, July 29, 2017

இனி ஆதார் திருத்தம் தபால் நிலையத்திலும் செய்யலாம்

"இனி தபால் நிலையங்களில் ஆதாரில் திருத்தம் செய்யலாம்

இன்று ஆதார் அட்டை இல்லாமல் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அரசால் வழங்கப்பட்டுள்ள ஆதாரில் பெயர், வயது, புகைப்படம், அலைபேசி எண்களை திருத்தம் செய்ய பொதுமக்கள் ஆதார் சென்டர்களுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

அதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் தென்மண்டலத்திலுள்ள 723 தபால் நிலையங்களில் ஆதாரில் திருத்தம் செய்து கொள்ள மத்திய அரசின் 'யூனிக் ஐடெண்டிபிகேஷன் அதாரிட்டி ஆப் இந்தியா'வுடன் அஞ்சல் துறை ஒப்பந்தம் போட்டு ஆதார் சென்டர்களை திறந்து வருகிறது.

தற்சமயம் சென்னை, கோவை, மதுரையிலுள்ள தலைமை தபால் நிலையங்களில் இந்த மையங்களை தொடங்கியுள்ள தபால்துறை, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைமை தபால் நிலையங்கள் உட்பட முக்கியமான ஊர்களில் இம்மையங்களை திறக்க உள்ளனர்.

தென்மண்டலத்தில் 723 தபால் நிலையங்களில் திறக்க உள்ளனர். இந்த சேவைக்கு 25 ரூபாயை சேவைக்கட்டனமாக வாங்க உள்ளனர். இதன் மூலம் கிராமப்புற மக்கள் எளிதாக ஆதாரில் திருத்தம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது."

No comments:

Post a Comment