தக்காளி சட்னியா ? ரத்தமா ?
மனைவி; "என்னங்க உங்கம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கப் போனீங்களே என்னாச்சு?"
கணவன்; "அதெல்லாம் சேர்த்தாச்சு"
மனைவி ;"எங்கம்மா சொன்னது சரிதாங்க"
கணவர் ; "என்னா சொன்னாங்க"
மனைவி ; "நீங்க தங்கமானவங்கலாம். ஆம்பளனா உங்கள போலதான் இருக்கனும்பாங்க"?
கணவர்; "ஏனாம்?
மனைவி;"மனைவி சொல்ல தட்டாம கேட்கிறீங்கனுதா."
கணவர்;" சொல்ல மறந்துட்டேன்.வயசான காலத்தில் பேச்சுத் துணைக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாங்கனு யோசனையா இருந்தேன்"
மனைவி ; "பேச்சு துணைக்கு ஆள் கிடைச்சுட்டாங்களா?"
கணவர்; "கிடைச்சுட்டாங்க"
மனைவி ; "அப்படியா யாரு?"
கணவர்; "உங்கம்மா.இப்பத்தான் உன் அண்ணன் வந்து உங்கம்மாவை சேர்த்துட்டு போனான்"
🏻மனைவி: என்னது?பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவை அனாதை ஆஸ்ரமத்தில் சேர்க்கிறவன் எல்லாம் ஒரு ஆம்பளயா?"
கணவன் மனதிற்குள் : ஏன்டி உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா...
No comments:
Post a Comment