கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Wednesday, July 26, 2017

காவலர் உடல் தகுதி தேர்வு நாளை முதல்

காவலர் உடல்தகுதி தேர்வு நாளை முதல் தொடக்கம்

காவலர் உடல்தகுதி தேர்வு நாளை முதல் தொடக்கம்!தமிழகத்தில் கடந்த ஜீன் மாதம் 21ம் தேதி இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.

4.82 லட்சம் பேர் எழுதிய அந்த தேர்வில் 28,051 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதையடுத்து தேர்ச்சிபெற்றவர்களுக்கு, 6 மையங்களில் உடல் தகுதி தேர்வு நாளை முதல் (27.07.2017) ஆகஸ்ட் 8ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.

இதில் உயரம் தாண்டுதல்,1500 மீட்டர் ஓட்டம், மற்றும் கயிறு ஏறுதல் என அனைத்து தகுதியுடன் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்படுவார்கள், அதன் மூலமாக அவர்கள் பெருகின்ற ஸ்டார்களின் மதிப்பையும், மதிப்பெண்ணையும் வைத்து அவர்கள் தரம் பிரிக்கப்படுவர்.

பின்னர் இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தீயணைப்புத்துறை, சிறைத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நாளை இந்த உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. இது தலைமை இடம் என்பதால் அனைத்து மாவட்டத்ததிலுள்ளவர்களும் இங்கு உடல் தகுதி தேர்வுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

ஆகையால் அதற்கான அ்னைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திற்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த தகுதித்தேர்வு சிறந்த முறையிலும் நேர்மையான முறையிலும் நடைபெறும் என சீருடை தேர்வானையம் தெறிவித்துள்ளது.

No comments:

Post a Comment