கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Saturday, July 8, 2017

நம் வந்தே மாதரத்திற்கு வந்த சோதனை

எந்த மொழியில் இயற்றப்பட்டது? பதில் தெரிந்தால் உயர் நீதிமன்றத்துக்கு உதவலாம்

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' எந்த மொழியில் இயற்றப்பட்டது என்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்வி குறித்து கே. வீரமணி என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வெழுதிய கே. வீரமணி என்பவர், தான் ஆசிரியர் தகுதித் தேர்வெழுதினேன். அதில் 107வது கேள்வியாக வந்தே மாதரம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்று கேட்கப்பட்டு, அதற்கு

ஏ. பெங்காலி,

பி.உருது,

சி. மராத்தி,

டி. சாமஸ்கிருதம்

என்ற 4 வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

இதற்கு ஆசிரியர் பயிற்சி புத்தகங்களில் கூறப்பட்டிருந்தது போல ஏ. பெங்காலி என்று அவர் பதிலளித்துள்ளார்.

ஆனால், அது தவறு என்று மதிப்பிடப்பட்டு, அவருக்கு 89 மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 90 மதிப்பெண் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், 89 மதிப்பெண் எடுத்ததால் வாய்ப்பை இழந்த வீரமணி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 'பக்கிம் சந்திர சட்டர்ஜி வந்தே மாதரத்தை வங்க மொழியில்தான் முதலில் எழுதினார்' என்று வாதிட்டார்.

கூடுதல் அரசு வழக்குரைஞர், 'சமஸ்கிருதத்தில்தான் முதலில் வந்தே மாதரம் எழுதப்பட்டது. பின்னர் அது வங்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது' என்றார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இது குறித்து தமிழக அரசின் கூடுதல் வழக்குரைஞர், ஆராய்ந்து பதில் அளிக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும், இந்த கேள்வி தொடர்பாக எந்தவொரு வழக்குரைஞரோ அல்லது தனி நபரோ உரிய ஆதாரத்துடன் விளக்கம் அளித்து நீதிமன்றத்துக்கு உதவலாம் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment