*1. “முடியாது “ என்று நீ சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்-அப்துல் கலாம்.
*2. உதவும் கரங்கள் பிரார்த்திக்கும் உதடுகளை விட சிறந்தது.* - அன்னை தெரஸா.
*3. இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.* - மகாகவி பாரதியார்.
*4. அறிவுத் தேவையை விட கவனக்குறைவு தான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.* வின்ஸ்ட்டன்ட் சர்ச்சில்.
*5.மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.* -பெர்னார்ட்ஷா.
*6.இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால், நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே…!* -ஹிட்லர்.
*7.கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது.* -காமராஜர்.
*8.எனது வெற்றிகளின் மூலம் என்னை மதிப்பிடாதீர்கள், எத்தனை முறை நான் கீழே விழுந்து மீண்டும் எழுந்தேன் என்பதன் மூலம் மதிப்பிடுங்கள்.* -நெல்சன் மண்டேலா.
9*. *அனுபவம் ஓர் உயர்ந்த நகை. ஏனென்றால் அது மிகவும் கூடுதலான விலை கொடுத்தே வாங்கப்பட்டிருக்கிறது.* - ஷேக்ஸ்பியர்.
10*. *உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாய் இரு. உயர்த்திப் பேசும்போது செவிடனாய் இரு.வாழ்வில் எளிதில் வெற்றிபெறுவாய்* -சுவாமி விவேகானந்தர்.
No comments:
Post a Comment