இன்றைய சிந்தனை
நீ மற்றவர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால், திறந்த மனதோடு பேசு அதற்காக எல்லாம் கொட்டித் தீர்த்து விடாதே.
இதயத்தை ஆயுதத்தால் வெல்ல முடியாது, மென்மையான அன்பால் தான் வெல்ல முடியும்.
நல்ல விஷயங்களை அமைதியாகச் செய் வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டு பேசட்டும்.
நல்ல எண்ணமும் மகிழ்ச்சியும் இருந்தால் யானையை நூலால் கட்டிக் கொண்டு போவது போல எங்கும் போய் வரலாம்.
உன்னை நீ அறிய வேண்டுமானால் மற்றவர்களை கவனி; மற்றவர்களை நீ அறிய வேண்டுமாயின், உன்னை நீ கவனி.
அனைவருக்கும் இன்றைய பொழுது இனிதாக அமையட்டும்
No comments:
Post a Comment