*என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*
🍎பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள்.
🍎உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
🍎நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக் கிளறாதீர்கள்.
🍎உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள்.
🍎விவரங்கள் சொல்லுங்கள். வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.
🍎தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள்.
🍎விவாதம் செய்யுங்கள். விவகாரம் செய்யாதீர்கள்.
🍎விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள் .
🍎சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்.
🍎செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள். எதிர் தரப்பும் பேசட்டும். என்னவென்று கேளுங்கள். எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.
🍎நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள்.
🍎தானாய்த்தான் முடியுமென்றால், வேறு வேலை பாருங்கள்.
🍎யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்....
வாழ்க்கை வசந்தம் பூக்கும்
No comments:
Post a Comment