கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, May 25, 2018

சூழ்நிலையை அறிந்து நீங்கள் இவ்வாறு செயல்படுவீர்களா ?

நீங்கள் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும்தான் வாழ்க்கையின் ஓட்டம் அமைகிறது. இதை விளக்கும் ஒரு சிறிய கதையைப் பார்ப்போமா?

ஒரு ஊரில் ஒரு குடிகாரத் தந்தை. அவருக்கு இரண்டு மகன்கள். தந்தை எப்பொழுதும் குடித்துவிட்டுத் தெருவில் வீழ்ந்து கிடப்பதும், மனைவி மக்களை அடித்து உதைப்பதுமாக இருந்து, ஒருநாள் செத்துப்போனார். சில வருடங்கள் கழிந்தன. மூத்தமகன் தந்தையைப் போலவே குடிப்பது, சூதாடுவது, குடும்பத்தில் தகராறு செய்வது என்று ஆகிவிட்டான். இளைய மகனோ, நன்கு படித்துப் பட்டம் பெற்று, ஒரு வேலையில் அமர்ந்தான். நல்ல குணமுடைய பெண்ணை மணந்தான். தனது உழைப்பாலும் நற்குணங்களாலும் அந்த நகரத்தின் பெரும்புள்ளிகளில் ஒருவராக உயர்ந்துவிட்டான்.

அக்குடும்பத்தைப் பற்றி அறிந்திருந்த ஒரு நண்பர் ஒருநாள், மூத்த மகனைத் தெருவில் சந்தித்தார். “ஏனப்பா இப்படிக் குடித்துச் சீரழிந்துபோகிறாய்?” என்று கேட்டார். “ஐயா, உங்களுக்கு எங்கள் தந்தையைப்பற்றித் தெரியுமல்லவா? சிறுவயது முதல் அந்தச் சூழலில் வளர்ந்ததால் நானும் இப்படிக் குடிக்கு அடிமையாகிவிட்டேன்.” என்று பதில் சொன்னான் அவன். சில நாட்களுக்குபின் அவர் இளைய மகனைச் சந்தித்தார். “உங்கள் குடும்பத்தைப் பற்றி எனக்குத் தெரியும். அத்தகைய சூழலில் பிறந்து வளர்ந்த நீ, இன்று சமூகத்தில் ஒரு உயரிய இடத்தைப் பிடித்திருப்பது மிகவும் பெரிய காரியம். நான் உன்னை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.” என்று பாராட்டினார். 
அதற்கு இளைய மகன் என்ன சொன்னான் தெரியுமா? “”ஐயா, உங்களுக்கு எங்கள் தந்தையைப்பற்றித் தெரியுமல்லவா? சிறுவயது முதல் அந்தச் சூழலில் வளர்ந்ததால், என் தந்தை செய்த தவறை நானும் செய்யக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன். நன்கு படித்தேன், நல்ல வேலையில் அமர்ந்தேன், மது மட்டுமல்ல, எந்தப் போதைப்பொருளையும் கண்ணாலும் பார்ப்பதில்லை. அதுவே எனது வெற்றிக்குக் காரணம்”. என்று பதில் கூறினான் அவன்.

இப்பொழுது சொல்லுங்கள். ஒருவன் வாழ்க்கை அவன் சூழலில் இருக்கிறதா, அதை அவன் பார்க்கும் கோணத்தில் இருக்கிறதா?

No comments:

Post a Comment