கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Friday, June 22, 2018

கடிதம் எழுதும் போது கவனிக்க வேண்டியவை

கடிதம்  எழுதும் போது  கவனத்தில்  கொள்ள வேண்டியது. 


1 ) அனுப்புனர்  அல்லது  விடுநர்  பெயர், முகவரி குறிப்பிட வேண்டும். 

2 ) பெறுனர் பெயர், முகவரி குறிப்பிட வேண்டும். 

3 ) யாருக்கு கடிதம் அனுப்பப்படுகின்றது  என்பதைப்பொருத்து 
எப்படி  அழைப்பது  என்று  முடிவு செய்து  எழுத  வேண்டும். 


தலைமை ஆசிரியர்,  மேலதிகாரி,  அரசு  அதிகாரி  என்றால்  மதிப்பிற்குரிய  ஐயா  என   
அழைக்க வேண்டும். 


பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால் 
அன்புள்ள   என  அழைக்க வேண்டும். 


வேறு  வெளியாட்களாக  இருப்பின்  அன்புடையீர்  என அழைக்க வேண்டும். 

4 )  கடிதத்தின்  பொருள்  என்ன என்பதை  எழுத வேண்டும். 

5 ) உள்ளடக்கம் -  நாம்  என்ன  சொல்ல  விரும்புகிறோமோ, அதை 
சுருக்கமாக  எழுதிட வேண்டும். 


6 )  இறுதியில்   ஊர், நாள்  ஆகியவற்றை  கடிதத்தின்  வலது  மூலையில் 
எழுதிட வேண்டும். 

7 )  இடது மூலையில்  யாருக்கு  கடிதம்  அனுப்பியுள்ளோம்  என்பதைப் 
பொறுத்து  தங்களின் பணிவான, அன்பான, உண்மையான  என்று 
எழுதிட வேண்டும். 


தலைமை ஆசிரியர்,  மேலதிகாரி,  அரசு  அதிகாரி  என்றால்  தங்களின் பணிவான   என   
நிறைவு செய்திட  வேண்டும். 


பெற்றோர், உறவினர், சகோதரன், சகோதரி, நண்பன் என்றால் 
தங்களின் அன்பான    என  முடித்திட  வேண்டும். 


வேறு  வெளியாட்களாக  இருப்பின்  தங்களின் உண்மையான   என நிறைவு செய்திட  வேண்டும். 


எந்த ஒரு கடிதத்திலும்   மேற் சொன்ன ஏழு 
அம்சங்களும்  கண்டிப்பாக  இருந்திட வேண்டும். 

No comments:

Post a Comment