கல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வாசகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு 2021 தின நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.
javascript snowHtml Codes

Sunday, May 29, 2016

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த தடை

செல்போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தடை

வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கை:

பள்ளி சூழலானது மாணவர்களை மகிழ்ச்சியடைய செய்யும் இடங்களாக இருக்க வேண்டும். தூய்மையான பள்ளி வளாகம், காற்றோட்டத்துடன் கூடிய சுத்தமான வகுப்பறைகள், பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர், சுகாதாரமிக்க கழிவறைகள் உள்ளிட்டவற்றை பெற்றோர் ஆசிரியர்கள் கழகம் மற்றும் ஆசிரியர்கள் துணையுடன் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அடுத்துள்ள பள்ளிகளில் ஐந்து, எட்டு மற்றும் 10ம் வகுப்பு படித்த மாணவர்களை தம் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு பள்ளிகளின் உயர்வை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இங்குள்ள வசதிகளான ஆங்கில வழி கல்வி, முற்றிலும் இலவசமான கல்வி, மனம் அழுத்தம் இல்லாத கல்வி முறை, அதிகரித்து வரும் மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட அம்சங்களை துண்டு பிரசுரங்களாக அச்சடித்து விநியோகம் செய்வதுடன் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன் இணைந்து தலைமை ஆசிரியர் வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளிகள் திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்கி அன்றே கால அட்டவணை தயாரித்து அளித்து கற்பித்தல் பணியை ஆசிரியர்கள் தொடங்க வேண்டும்.

ஆசிரியர்கள் தினமும் பள்ளி தொடங்கும் நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாக வந்து தங்கள் வகுப்பறையின் உள் சுத்தம், வெளிசுத்தம் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு இது தொடர்பாக தக்க அறிவுரை வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள் இல்லாத நிலை வகுப்புகளில் இருக்க கூடாது.

ஆசிரியர்கள் பணி நேரத்தில் வகுப்பறைகளை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க கூடாது. வெளியே செல்ல நேர்ந்தால் உரிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர்கள் எந்த காரணம் கொண்டும் செல்போன்களை பயன்படுத்த கூடாது.

செல்போன் பயன்படுத்தினால் தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment